Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தேள் கொட்டிய திருடர்கள்! - தங்கர் பச்சான்
நம்மைப் பாதுகாக்கத்தான் இவர்கள் இருக்கிறார்கள் என எண்ணியபோது நமக்குத் தெரியாத வழிகளில் திருடினார்கள்!
பின், நம்மை பாதுகாக்கிறோம் என சொல்லிக்கொண்டே நம்மிடமிருந்து திருடியதிலிருந்தே நமக்கு பங்கு கொடுத்தார்கள்!
நாமும் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டோம்!
இப்போது அந்தத் திருடர்கள் நம் வீட்டையே சொந்தமாக்கிக் கொண்டார்கள்!
எனவே நம் வீட்டு சாவி இப்போது அவர்கள் கையில் என்பதால் விரும்பியதையெல்லாம் திருடிக்கொள்ளலாம்!
கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத்தெரிந்தும் நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
திருடியதிலிருந்து பங்கு வாங்கியவர்கள் என்பதால் யாரிடத்திலும் போய் முறையிடவும் முடியவில்லை!
முறையிட்டாலும், நடவடிக்கை எடுப்பான் என நினைப்பவனும் பெரிய திருடனாக இருக்கிறான்.
நாம் இப்போது என்ன செய்வது? இதுதான் ஒவ்வொருவரின் கேள்வியும்!
தேள் கொட்டி விட்டால் திருடன் கத்த முடியுமா? அதுதான் தற்போதைய நிலை!
எல்லாவற்றையும் பறி கொடுத்தாலும் நாளையும் இருப்பதிலேயே பெரியத் திருடனாகப் பார்த்துதான் அவர்களையே காவல் வைப்போம்!
ஏனென்றால் நாம் எல்லாம் தெரிந்தவர்கள்.
- தங்கர் பச்சான்