Don't Miss!
- News கெஜ்ரிவால் கைது மட்டுமல்ல.. காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கமும் எங்களுக்கு தெரியும்! அமெரிக்கா
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Sports நீ தான் தம்பி சிஷ்யன்.. பவுலிங் செய்வதற்கு முன் தோனி காலில் விழுந்த பதிரனா.. தல ரியாக்சன் பாருங்க!
- Finance வாரன் பஃபெட்- நானும் படுக்கமாட்டேன், தள்ளியும் படுக்கமாட்டேன்..! சம்பளம், ஈவுத்தொகைக்கு பெரிய 'நோ'
- Automobiles ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தங்கரின் இங்கிலீஷ் மீடியம் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி மூலம் தனது நடிப்புத் திறமையையும் நிரூபித்து விட்ட தங்கர், அடுத்ததாக இங்கிலீஷ்மீடியம் என்ற மலையாளப் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். இதிலும் அவர் தான் கதை நாயகன்.ஒளி ஓவியராக அறியப்பட்ட தங்கர்பச்சான், திடீரென அழகி மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அழகிபெற்ற பெரும் வெற்றியால், உந்தப்பட்ட தங்கர், சொல்ல மறந்த கதை மூலம் இயக்குநர் சேரனை நடிகராக்கினார்.அழகி, சொல்ல மறந்த கதை ஆகிய இரண்டு படங்களின் கதைகளும் மிகவும் வரவேற்கப்பட்டன, ரசிக்கப்பட்டன.இவற்றைத் தொடர்ந்து தென்றல் மூலம் தனது இயக்கத்தைத் தொடர்ந்தார் தங்கர்.இந்த மூன்று படங்களுமே தங்கரை ஒரு நல்ல இயக்குநராகவும் தமிழர்கள் மத்தியில் அடையாளம் காட்டியது.முதல் மூன்று படங்களையும் முத்தாக ரசித்த தமிழ் ரசிகர்களுக்காக தங்கர் கொடுத்த அட்டகாசமான படம் தான்சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.மலையாளத்தில் சீனிவாசன், கதை, இயக்கம், வசனம், நடிப்பில் வெளியான சிந்தாவிஷ்யாய சியாமளா என்றபடத்தின் ரீமேக் தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி. மலையாளத்தில் சீனிவாசனும், சங்கீதாவும் ஜோடியாக நடித்தார்கள். தமிழில் தங்கருக்கு ஜோடியாக நவ்யா நாயர்நடித்தார்.இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு நடிகைகள் குறித்து சர்ச்சையாகப் பேசப் போய் சிக்கலில் மாட்டினார் தங்கர்.ஆனால் படு டீசன்ட்டாக நடிகர் சங்கத்திற்குப் போய் மன்னிப்பு கேட்டு அனைவரையும் ஆப் செய்து விட்டார்.சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி வெளியாகி 50 நாட்களைக் கடந்து இன்னும் ஓடிக் கொண்டுள்ளது. படத்தில்தங்கரின் வேட அமைப்பு, நவ்யா நாயரின் நடிப்பு, இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்வெகுவாக பேசப்பட்டு வருகின்றன.இந்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள தங்கர், அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். இந்தப் படம் மலையாளரீமேக் தான். அதே சீனிவாசனின் இங்கிலீஷ் மீடியம் படத்தின் கதையை வாங்கியுள்ள தங்கர் அதை தமிழில்எடுக்கவுள்ளார்.இந்தப் படத்திலும் தங்கரே நாயகனாக நடிக்கவுள்ளார். ஆங்கில மொழியின் மீதான நம்மவர்களின் மோகத்தைசாடுவதே இப்படத்தின் கதையாகும். இதை தனது பாணியில் நகைச்சுவையாக சொல்லப் போகிறார் தங்கர். இந்தக் கதை தமிழ் மீது தணியாக தாகம்,மோகம் கொண்ட தங்கருக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளாராம் தங்கர். இப்படத்தில் ஹீரோயின் யாரும் இருப்பார்களா என்பதுதான் இப்போதைக்கு கோலிவுட்டில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி மூலம் தனது நடிப்புத் திறமையையும் நிரூபித்து விட்ட தங்கர், அடுத்ததாக இங்கிலீஷ்மீடியம் என்ற மலையாளப் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். இதிலும் அவர் தான் கதை நாயகன்.
ஒளி ஓவியராக அறியப்பட்ட தங்கர்பச்சான், திடீரென அழகி மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அழகிபெற்ற பெரும் வெற்றியால், உந்தப்பட்ட தங்கர், சொல்ல மறந்த கதை மூலம் இயக்குநர் சேரனை நடிகராக்கினார்.
அழகி, சொல்ல மறந்த கதை ஆகிய இரண்டு படங்களின் கதைகளும் மிகவும் வரவேற்கப்பட்டன, ரசிக்கப்பட்டன.இவற்றைத் தொடர்ந்து தென்றல் மூலம் தனது இயக்கத்தைத் தொடர்ந்தார் தங்கர்.
இந்த மூன்று படங்களுமே தங்கரை ஒரு நல்ல இயக்குநராகவும் தமிழர்கள் மத்தியில் அடையாளம் காட்டியது.முதல் மூன்று படங்களையும் முத்தாக ரசித்த தமிழ் ரசிகர்களுக்காக தங்கர் கொடுத்த அட்டகாசமான படம் தான்சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.
மலையாளத்தில் சீனிவாசன், கதை, இயக்கம், வசனம், நடிப்பில் வெளியான சிந்தாவிஷ்யாய சியாமளா என்றபடத்தின் ரீமேக் தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.
மலையாளத்தில் சீனிவாசனும், சங்கீதாவும் ஜோடியாக நடித்தார்கள். தமிழில் தங்கருக்கு ஜோடியாக நவ்யா நாயர்நடித்தார்.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு நடிகைகள் குறித்து சர்ச்சையாகப் பேசப் போய் சிக்கலில் மாட்டினார் தங்கர்.ஆனால் படு டீசன்ட்டாக நடிகர் சங்கத்திற்குப் போய் மன்னிப்பு கேட்டு அனைவரையும் ஆப் செய்து விட்டார்.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி வெளியாகி 50 நாட்களைக் கடந்து இன்னும் ஓடிக் கொண்டுள்ளது. படத்தில்தங்கரின் வேட அமைப்பு, நவ்யா நாயரின் நடிப்பு, இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்வெகுவாக பேசப்பட்டு வருகின்றன.
இந்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள தங்கர், அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். இந்தப் படம் மலையாளரீமேக் தான். அதே சீனிவாசனின் இங்கிலீஷ் மீடியம் படத்தின் கதையை வாங்கியுள்ள தங்கர் அதை தமிழில்எடுக்கவுள்ளார்.
இந்தப் படத்திலும் தங்கரே நாயகனாக நடிக்கவுள்ளார். ஆங்கில மொழியின் மீதான நம்மவர்களின் மோகத்தைசாடுவதே இப்படத்தின் கதையாகும்.
இதை தனது பாணியில் நகைச்சுவையாக சொல்லப் போகிறார் தங்கர். இந்தக் கதை தமிழ் மீது தணியாக தாகம்,மோகம் கொண்ட தங்கருக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளாராம் தங்கர். இப்படத்தில் ஹீரோயின் யாரும் இருப்பார்களா என்பதுதான் இப்போதைக்கு கோலிவுட்டில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.