Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
செக் பவுன்ஸ்: முத்துக்குமார் குடும்பம் தயாரிப்பாளர்கள் பட்டியலை கொடுத்தால் பணத்தை வாங்கித் தருகிறேன்
சென்னை: நா. முத்துக்குமாருக்கு எந்தெந்த தயாரிப்பாளர்கள் அளித்த காசோலைகள் பவுன்ஸாகி வந்தன என்ற பட்டியலை அவரது குடும்பத்தார் அளித்தால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தான் வாங்கித் தருவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.
பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 14ம் தேதி ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரை 15 நிமிடங்கள் முன்கூட்டியே அழைத்து வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாக அவரின் நெருங்கிய நண்பரான இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.
முத்துக்குமாரின் திடீர் மறைவால் அவரது நண்பர்களும், ரசிகர்களும் சோக யாழை மீட்டுகிறார்கள்.
பணம்
முத்துக்குமாரின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் பாடல் எழுதியதற்கு தயாரிப்பாளர்கள் பலர் காசோலைகளை அளித்ததாகவும் அந்த காசோலைகளில் பல வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் பவுன்ஸாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ரூ.70 லட்சம்
முத்துக்குமாருக்கு அளிக்கப்பட்டு பவுன்ஸாகி வந்த காசோலைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் என்று கூறப்படுகிறது. அந்த பணம் அவரது குடும்பத்தாருக்கு கிடைத்தால் பேருதவியாக இருக்கும்.
தாணு
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நா. முத்துக்குமாருக்கு எந்தெந்த தயாரிப்பாளர்கள் அளித்த காசோலைகள் பவுன்ஸாகி வந்தன என்ற பட்டியலை அவரது குடும்பத்தார் அளித்தால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தான் வாங்கித் தருவதாக தாணு தெரிவித்துள்ளார்.
உழைப்பு
தாணு கூறியபடி அவர் முத்துக்குமாருக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுத்தால் 9 வயது மகன், 8 மாத கைக்குழந்தையை வைத்துக் கொண்டு கண்ணீரோடு நிற்கும் முத்துக்குமாரின் மனைவிக்கு அது பேருதவியாக இருக்கும்.
முத்துக்குமார்
எங்கள் அண்ணன் எளிய வாழ்க்கை வாழத் தேவையானவற்றை விட்டுச் சென்றுள்ளார், அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது என்று முத்துக்குமாரின் தம்பி ரமேஷ் குமார் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.