Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொஞ்சம் பிளாஷ்பேக்.. அந்த சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த பிரபல ஹீரோ.. பிறகுதான் நடந்தது அந்த மேஜிக்!
சென்னை: தமிழில் சூப்பர் ஹிட்டான அந்த படத்தை அந்த ஹீரோ நிராகரித்ததை அடுத்து புதுமுகங்கள் நடித்தனர்.
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருப்பது சினிமாவில் கொஞ்சம் அதிகம்தான்.
படக்குழு ஒன்றை முடிவு செய்தால், விதி வேறொன்றை வித்தியாசமாக முடிவு செய்திருக்கும்.
மனதுக்குள் வருத்தம்
அது அப்படித்தான். இதற்கு பல படங்கள் உதாரணங்களாக இருக்கின்றன. அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி ஹீரோக்கள் கூட ஏதோ ஒரு காரணத்துக்காக, நல்ல கதைகளை விட்டுவிட்டு, பிறகு மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் இந்த சூப்பர் ஹிட் படத்துக்கும் நடந்திருக்கிறது.
வெயிலின் வெற்றி
அது அங்காடி தெரு! பசுபதி, பரத், பாவனா, பிரியங்கா நடிப்பில் வெளியான வெயில் படத்தின் ஹிட்டுக்கு பிறகு இயக்குனர் வசந்தபாலன் உருவாக்கிய படம், இது. முதல்படமாக அவர் 'ஆல்பத்'தை உருவாக்கி இருந்தார். அது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால், வெயிலின் வெற்றி ஆல்பத்தை மறக்கடிக்க வைத்துவிட்டது.
செல்ல சண்டை
அங்காடி தெரு படத்தில் புதுமுகம் மகேஷ், அஞ்சலி, பிளாக் பாண்டி, இயக்குனர் ஏ.வெங்கடேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். பிறகு அவருக்கும் இயக்குனருக்கும் செல்ல சண்டையாகிவிட, விஜய் ஆண்டனி இசை அமைப்பாளர் ஆனார்.
ரத்தமும் சதையுமாக
ஐங்கரன் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியிருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரியும் இளம் பெண்களும் ஆண்களும் எப்படி கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்பதை ரத்தமும் சதையுமாகச் சொன்ன படம் இது.
நடிச்சா நல்லாருக்கும்
பல விருதுகளை பெற்ற இந்தப் படத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்திருந்தார், இயக்குனர் வசந்தபாலன். அதனால், படத்தின் கதையை அவரிடம் சொன்னார். கதையை ரசித்துக் கேட்ட நடிகர் தனுஷ், 'கதை நல்லாருக்கு. இதுல நான் நடிக்கிறதவிட புதுமுகங்கள் நடிச்சா நல்லாருக்கும்' என்றார்.
மகேஷாக மாறிப்போனார்
அதற்குப் பிறகு புதுமுகமான மகேஷ் நடித்தார். படம், எதிர்பார்த்ததை விட ஹிட்டானது. மகேஷ், 'அங்காடி தெரு மகேஷாக'வே மாறிப்போனார். ஒரு வேளை நடிகர் தனுஷ் நடித்திருந்தால், படம் இன்னும் மெகா ஹிட்டாகி இருக்குமோ என்னவோ? சினிமாவில் எதுவும்தான் நடக்கும்.