Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொஞ்சம் பிளாஷ்பேக்: அஜித்குமார் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக சண்டைப் போட்ட பிரபல வில்லன் நடிகர்!
சென்னை: அஜித் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக வில்லன் நடிகர் ஒருவர் சண்டை போட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
செல்ல சண்டைகளுக்கும் ஈகோவிற்கும் சினிமாவில் பஞ்சமே இருக்காது. சின்ன விஷயம் கூட ஈகோவால் பெரிய பிரச்னையாக தலைதூக்கும்.
இது சினிமாவில் அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஒவ்வொரு படத்திலும் இது நடக்கும்.
குறுக்கு சிறுத்தவளே.. இடையழகால்.. ரசிகர்களை வளைத்து வசீகரித்த நாயகிகள்!
அஜித்தின் ராசி
அப்படி சின்ன சின்ன விஷயங்களால் பல படங்களில் பெரிய பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒரு படத்தின் ஷூட்டிங்கில், ஒரு சட்டைக்காக நடந்திருக்கிறது பெரும் சண்டை. அஜித்குமார் நடிப்பில் உருவான படம், ராசி. 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரம்பா, பிரகாஷ் ராஜ், நாகேஷ், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஷில்பா ஷெட்டி
சிற்பி இசை அமைத்த இந்தப் படத்தை எஸ்.என்.ராஜா தயாரித்திருந்தார். முரளி அப்பாஸ் இயக்கி இருந்தார். இதில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. அப்போது அவர் பிரபுதேவாவுடன் 'ரோமியோ ஜூலியட்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
சம்பள விஷயம்
இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்துகொண்டிருந்தது. அங்கு இயக்குனர் முரளி அப்பாஸும், தயாரிப்பாளர் எஸ்.என்.ராஜாவும் ஷில்பா ஷெட்டியை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்தனர். கதையை அவரும் அவர் அம்மாவும் கேட்டனர். பிறகு கதை நல்லா இருக்கு, நடிக்கலாம் என்ற அவர்கள் சம்பள விஷயத்தை ஆரம்பித்தனர்.
நடிகை ரம்பா
அவர் கேட்டத் தொகை அதிகமாக இருந்தது. அப்போதே ரூ.25 லட்சம் வேண்டும் என்றாராம். கால்ஷீட் பிரனையும் ஏற்பட்டது. இதனால் அவரை விட்டு விட்டு நடிகை ரம்பாவை ஒப்பந்தம் செய்தனர். இதன் ஷூட்டிங் காரைக்குடியில் நடந்தது. அப்போது வில்லனை, ஹீரோ அஜித் தரையில் போட்டு இழுத்து வருவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.
வில்லன் நடிகர்
ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டுக்கு செல்லும்போது அந்த வில்லன் நடிகர், 'சட்டை அழுக்காகி விட்டது. வேறு சட்டை வேண்டும்' என்றார். 'சண்டைக்காட்சிதானே, சட்டை அழுக்காக இருந்தால் பரவாயில்லை' என்று கூறப்பட்டது. அடுத்த ஷாட்டுக்கு ரெடியானார் இயக்குனர். மறுத்தார் வில்லன். இது பெரிய பிரச்னையானது.
பிரகாஷ் ராஜ்
பிறகு, கோபத்தில் சென்னைத் திரும்பி விட்டார் வில்லன் நடிகர். இதனால் அவர் இல்லாத காட்சியை படக்குழு எடுத்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் ஷூட்டிங்கிற்கு அழைத்து வந்தனர். பிறகு ஷூட்டிங் தொடர்ந்தது. அந்த வில்லன் பிரகாஷ்ராஜ்!