Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொஞ்சம் பிளாஷ்பேக்: அஜித்குமார் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக சண்டைப் போட்ட பிரபல வில்லன் நடிகர்!
சென்னை: அஜித் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக வில்லன் நடிகர் ஒருவர் சண்டை போட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
செல்ல சண்டைகளுக்கும் ஈகோவிற்கும் சினிமாவில் பஞ்சமே இருக்காது. சின்ன விஷயம் கூட ஈகோவால் பெரிய பிரச்னையாக தலைதூக்கும்.
இது சினிமாவில் அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஒவ்வொரு படத்திலும் இது நடக்கும்.
குறுக்கு சிறுத்தவளே.. இடையழகால்.. ரசிகர்களை வளைத்து வசீகரித்த நாயகிகள்!
அஜித்தின் ராசி
அப்படி சின்ன சின்ன விஷயங்களால் பல படங்களில் பெரிய பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒரு படத்தின் ஷூட்டிங்கில், ஒரு சட்டைக்காக நடந்திருக்கிறது பெரும் சண்டை. அஜித்குமார் நடிப்பில் உருவான படம், ராசி. 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரம்பா, பிரகாஷ் ராஜ், நாகேஷ், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஷில்பா ஷெட்டி
சிற்பி இசை அமைத்த இந்தப் படத்தை எஸ்.என்.ராஜா தயாரித்திருந்தார். முரளி அப்பாஸ் இயக்கி இருந்தார். இதில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. அப்போது அவர் பிரபுதேவாவுடன் 'ரோமியோ ஜூலியட்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
சம்பள விஷயம்
இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்துகொண்டிருந்தது. அங்கு இயக்குனர் முரளி அப்பாஸும், தயாரிப்பாளர் எஸ்.என்.ராஜாவும் ஷில்பா ஷெட்டியை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்தனர். கதையை அவரும் அவர் அம்மாவும் கேட்டனர். பிறகு கதை நல்லா இருக்கு, நடிக்கலாம் என்ற அவர்கள் சம்பள விஷயத்தை ஆரம்பித்தனர்.
நடிகை ரம்பா
அவர் கேட்டத் தொகை அதிகமாக இருந்தது. அப்போதே ரூ.25 லட்சம் வேண்டும் என்றாராம். கால்ஷீட் பிரனையும் ஏற்பட்டது. இதனால் அவரை விட்டு விட்டு நடிகை ரம்பாவை ஒப்பந்தம் செய்தனர். இதன் ஷூட்டிங் காரைக்குடியில் நடந்தது. அப்போது வில்லனை, ஹீரோ அஜித் தரையில் போட்டு இழுத்து வருவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.
வில்லன் நடிகர்
ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டுக்கு செல்லும்போது அந்த வில்லன் நடிகர், 'சட்டை அழுக்காகி விட்டது. வேறு சட்டை வேண்டும்' என்றார். 'சண்டைக்காட்சிதானே, சட்டை அழுக்காக இருந்தால் பரவாயில்லை' என்று கூறப்பட்டது. அடுத்த ஷாட்டுக்கு ரெடியானார் இயக்குனர். மறுத்தார் வில்லன். இது பெரிய பிரச்னையானது.
பிரகாஷ் ராஜ்
பிறகு, கோபத்தில் சென்னைத் திரும்பி விட்டார் வில்லன் நடிகர். இதனால் அவர் இல்லாத காட்சியை படக்குழு எடுத்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் ஷூட்டிங்கிற்கு அழைத்து வந்தனர். பிறகு ஷூட்டிங் தொடர்ந்தது. அந்த வில்லன் பிரகாஷ்ராஜ்!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!