Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
25 வது நாளை கடந்த தி லெஜண்ட்...மகிழ்ச்சியாக அறிவித்த அண்ணாச்சி
சென்னை: லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து, நாயகனாக அறிமுகமான படம் 'தி லெஜண்ட்'. இந்த படம் ஜுலை 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவான இந்த படம் தியேட்டர்களில் வெளியானது.
Recommended Video
பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். யாஷிகா, விவேக், ராய் லட்சுமி, சுமன், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் பிரம்மாண்டமாக வெளியானது.

முதல் பட ஹீரோவிற்கு இத்தனை பெரிய ஓப்பனிங் என்பது இதுவரை தமிழ் சினிமா காணாதது. இந்நிலையில், இப்படம் நேற்று (ஆக.21) 25ஆவது நாளை கடந்துள்ளது. பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் படம் இப்போது வரை தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பது சாதனையான விஷயமாக திரையுலக வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் இதுவரை 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ரிலீசான முதல் நாளிலேயே 6 கோடியை உலகம் முழுவதும் வசூல் செய்து அனைவரும் ஆச்சரியத்தை கொடுத்தது தி லெஜண்ட் படம்.இருந்தாலும் தி லெஜண்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனத்தை ஈடுசெய்ய அடுத்ததாக மற்றொரு படத்தில் நடிக்க அண்ணாச்சி முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இரண்டாவது வாரத்திலும் கலக்கும் தி லெஜண்ட்.. சந்தோஷத்தில் லெஜண்ட் சரவணன்.. காரணம் இதுதான்!
இந்நிலையில் தி லெஜண்ட் 25 நாட்களை கடந்துள்ளதை ட்விட்டரில் புதிய போஸ்டர் மூலம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் லெஜண்ட் அண்ணாச்சி. மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் படத்திலேயே திரையுலகில் அழுத்தமான இடத்தை பிடித்ததுடன், தி லெஜண்ட் படம் 25 நாட்களை கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதற்கு அண்ணாச்சி பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அடுத்த படத்தின் அப்டேட்டிற்காக காத்திருப்பதாக நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.