Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சந்தானம்.. யோகிபாபு நடிக்கும் .. டகால்டி திட்டமிட்டபடி 31தேதி ரிலீஸ் !
சென்னை : டகால்டி திரைப்படம் திட்டமிட்டபடி 31ந் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த பிரபல விநியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம்" டகால்டி ". சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகின் முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், இந்திப் பட உலகின் தருண் அரோரா, மற்றும் ராதாரவி, ரேகா, மனோபாலா என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி. கார்கி பாடல்களையும், பிரபல பாடகர் விஜயநாராயணன் இசையையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஜாக்கி கலையையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் விஜய் ஆனந்த். இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் திட்டமிட்டபடி வரும் 31தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
சந்தானமும் யோகி பாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தானம் படங்களில் உள்ள நகைச்சுவைக்கு மக்களிடம் எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருக்கும். அதை இந்த படத்திலும் பூர்த்தி செய்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.