Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி? போட்டோக்களை கொடுத்து கண்காணிக்கிறது போலீஸ்
பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களில் அவரது போட்டோவை கொடுத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களில் அவரது போட்டோவை கொடுத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையால் சசிகுமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தடுக்கும் வகையில் விமான நிலையங்களில் அன்புச்செழியனின் போட்டோ மற்றும் விவரங்களைக் கொடுத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அவரது சொந்த ஊரான மதுரையிலும் போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர். மேலும் அன்புச்செழியனின் செல்போன் எண்ணியையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.