Don't Miss!
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- News பாஜக கூட்டணியில் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்? சற்று நேரத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி? போட்டோக்களை கொடுத்து கண்காணிக்கிறது போலீஸ்
பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களில் அவரது போட்டோவை கொடுத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களில் அவரது போட்டோவை கொடுத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையால் சசிகுமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தடுக்கும் வகையில் விமான நிலையங்களில் அன்புச்செழியனின் போட்டோ மற்றும் விவரங்களைக் கொடுத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அவரது சொந்த ஊரான மதுரையிலும் போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர். மேலும் அன்புச்செழியனின் செல்போன் எண்ணியையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.