Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிகில் படத்தில் நடிக்கும்போது கிடைத்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு கிடைத்துள்ளது-இந்துஜா
Recommended Video
சென்னை: பிகில் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தபோது எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேனோ, அதே அளவு சந்தோஷத்தை இப்பொழுது அடைந்துள்ளேன் என்று உதவும் உள்ளங்கள் அமைப்பு நடத்திய ஆனந்த தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை இந்துஜா கூறினார்.
மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற நடிகை அதுல்யா ரவி, உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாருமே இருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டு பேசினார்.
உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனம் வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒன்று திரட்டி அவர்களுக்காக ஆனந்த தீபாவளி என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து ஆனந்த தீபாவளி கொண்டாடினர்.
நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன்.
விஜய்க்கு கிளி கொடுத்த இந்துஜா
மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள், என்றார்.
இந்த நிகழ்வில் நடிகை அதுல்யா ரவி பேசியபோது, உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாருமே இருக்க மாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பாதை வகுக்க வேண்டியது அவசியம், என்றார்.
சிபிராஜ் உடன் ஜோடி சேரும் ஆண்ட்ரியா கூடவே அதுல்யா ரவி
உதவும் உள்ளங்கள், அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், 22 ஆண்டுகளாக தொடர்ந்து ஆனந்த தீபாவளி நிகழ்வு நடைபெற்று வருகிறது. தெய்வக் குழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷத்தை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம், என்றார்.