Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சங்கப் பொதுக்குழு: சரத்குமாருடன் மோதத் தயாராகும் விஷால் குரூப்
சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். இந்தக்கூட்டத்தில் இளம் நடிகர்கள் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பத் தயாராகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்காக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தனித் தனியாக கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் பொதுக்குழுவில் பங்கேற்குமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது.
இக்கூட்டத்தில் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதா ரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திர சேகர், செயற்குழு உறுப்பினர்கள் சிலம்பரசன், ஸ்ரீகாந்த், மனோபாலா, சத்யபிரியா, நளினி, சார்லி, சின்னி ஜெயந்த், சி.ஐ.டி. சகுந்தலா, பாத்திமாபாபு, சவுண்டப்பன், குண்டு கல்யாணம், பசி சத்யா, கே.ஆர்.செல்வாஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நடிகர் சங்கத் தேர்தல்
நடிகர் சங்க அறக்கட்டளை நடவடிக்கைகள், 2015-2018 ஆம் ஆண்டுக்கான நடிகர் சங்க தேர்தல் தேதி முடிவு செய்தல், வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
மோதத் தயாராகும் நடிகர்கள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடியபோதே சரத்குமார் அணிக்கும் விஷால் அணிக்கும் பயங்கர மோதல் நடக்கும் சூழ்நிலை உருவானது.
''நடிகர் சங்கத்துக்காக பாரம்பரியமாக இருந்த கட்டடத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுத்து ஷாப்பிங் மால் கட்டத் திட்டமிட்டார்கள். ஆனால், சிலர் நீதிமன்றத்துக்குப் போய்விட்டார்கள். இந்த ஒப்பந்தம் பற்றி நாசர், விஷால் உள்ளிட்டவர்கள் கேள்வி கேட்டார்கள்.
இந்த ஆண்டும் சிக்கல்
மூன்று மாதத்துக்குள் இந்தப் பிரச்னையை முடித்து கட்டுமானப் பணித் தொடங்கும் என்று அப்போது சரத்குமார் வாக்குறுதி கொடுத்தார். ஒரு வருஷம் ஆகியும் ஒரு செங்கல்கூட எடுத்துவைக்க முடியவில்லை. மறுபடியும் நாங்கள் கேள்வி கேட்க இருக்கிறோம்'' என்று விஷால் கோஷ்டி நடிகர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் பூச்சி முருகன், எம்.சுந்தரம், பி.எ.காஜா முகைதீன் ஆகியோர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 17ம் தேதி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது. இதில் நாங்கள் கலந்துகொள்ளவிருக்கிறோம். அப்போது, எங்களை கூட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் தடுத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, நாங்கள் பொதுக்குழுவில் பங்கேற்க உரிய பாதுகாப்பு தருமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த மனு 13வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி கே.கணேசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 17ம் தேதி நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக மனுதாரர்களுக்கு உரிய பாதுகாப்பு தேனாம்பேட்டை போலீசார் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தலைவர் பதவிக்குத் தேர்தல்
நடிகர் சங்கத்தில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சரத்குமார் தொடர்ந்து இரண்டு முறை தலைவராக இருக்கிறார். கடந்த முறை முக்கிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இளம் ஹீரோக்கள் போட்டி
நடிகர் சங்கத்திற்கு இந்த முறை தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது. தேர்தல் நடந்தால் விஷால் தலைமையிலான இளம் ஹீரோக்கள் போட்டியிடுவது உறுதி என்று கூறப்படுகிறது.
பரபரப்பான பொதுக்குழு
விஷால், நாசர் கோஷ்டி ஒருபக்கம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு தாரை வார்த்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பூச்சி முருகன், எம்.சுந்தரம், பி.எ.காஜா முகைதீன் ஆகியோரும் பொதுக்குழுவில் பங்கேற்க உள்ளனர். எனவே இந்த ஆண்டு மிகவும் பரபரப்பான காட்சிகள் நடிகர் சங்க பொதுக்குழுவில் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.