Don't Miss!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எங்களுக்கு இன்னும் ஹனிமூனே முடியலை அதுக்குள்ள குழந்தையா - நிக் ஜோன்ஸ்
மும்பை: திருமணமாகி ஒரு வருடம் முடிந்து விட்டது குழந்தை பெற்று கொண்டு குடும்பத்தை தொடங்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று பிரியங்கா சோப்ரா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். பிரியங்காவின் குழந்தை பெற்று கொள்ளும் ஆசை பற்றி கூறியுள்ள அவரது கணவர் நிக் நாங்கள் தேன்நிலவு காலத்தில் இருக்கிறோம். ஜோனாஸ் பிரதர்ஸ் ரீயூனியன் டூர் முடிவடைந்த பிறகு அதற்கு முயற்சிக்கத் தொடங்கலாம் என்கிறார். என் குடும்பம் உருவாகும் போது ஒரு தந்தையாக நான் என் மனைவியோடு நூறு சதவீதம் இருக்கு விரும்புகிறேன். இன்னும் சில மாதங்களில் அது நிகழலாம் என்று கூறியுள்ளார்.
முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியுமான பிரியங்கா சோப்ரா அமெரிக்காவின் பாப் பாடகரான நிக் ஜோனாஸ்சை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 36 வயதான பிரியங்கா சோப்ரா 26 வயதான நிக் ஜோன்ஸ் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.
திருமணமாகி ஒரு வருட காலம் முடிவடைய இருக்கும் இந்த வேலையில் இவர்கள் இருவரும் குழந்தை பெற்று கொண்டு குடும்பத்தை தொடங்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று பிரியங்கா சோப்ரா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் ஆசை இதுவானால் நிக்கின் எண்ணமும் அதுதானே என்பது சற்று குழப்பமாகவே உள்ளது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. காதலர் விக்கி பிறந்தநாளை நயன் எப்டி கொண்டாடி இருக்கார் பாருங்க!
பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வோக் இந்தியா கவர் ஸ்டோரிக்காக அளித்த பேட்டியில், தன்னுடைய விருப்ப பட்டியலில் குழந்தை பெற்றுக்கொள்ள போவதை தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சரியான நேரம் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். என் குழந்தை என்னை பெருமையுடன் இது என்னுடைய அம்மா என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
பிரியங்கா யுனிசெஃப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக விளங்குவதால் பல நன்கொடைகள் வழங்கியுள்ளார். தன்னார்வத் தொண்டுகள் பல செய்துள்ளார். அதனால் அவரது குழந்தைகள் வருங்காலத்தில் பெருமிதத்துடன் இருப்பார்கள் என்பது நிச்சயம்.
பிரியங்காவின் குழந்தை பெற்று கொள்ளும் ஆசை பற்றி நிக் கூறும்பொழுது, குடும்பத்தை தொடங்குவதற்கு முன்னர் சிறுது காலம் காத்திருக்க விரும்புவதாக தெரிவித்தார். இப்பொழுது நங்கள் தேன்நிலவு காலத்தில் இருக்கிறோம். ஜோனாஸ் பிரதர்ஸ் ரீயூனியன் டூர் முடிவடைந்த பிறகு அதற்கு முயற்சிக்க தொடங்கலாம் என்றுள்ளார்.
ஏனெனில் அவர் சுற்றுப்பயணத்தின் போது பிரியங்காவை முழுமையாக கவனித்து கொள்ள முடியாது. என் குடும்பம் உருவாகும் போது ஒரு தந்தையாக நான் என் மனைவியோடு நூறு சதவீதம் இருக்கு விரும்புகிறேன். இன்னும் சில மாதங்களில் அது நிகழலாம் என்று தெரிகிறது. நிச்சயம் பிரியங்கா சோப்ராவின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் என்று நாம் நம்புவோம்.