Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சங்கத் தலைவரின் மாஸ்டர் ப்ளானுக்கு செக் வைத்ததா தியேட்டர் அதிபர்கள் சங்கம்?
Recommended Video
எதற்கு நடக்கிறது என்றே சரியான புரிதல் இல்லாமல் புது படங்கள் ரிலீஸ் இல்லை என்று இரண்டு வார காலமாக ஸ்ட்ரைக் நடக்கிறது. இந்நிலையில் இந்த ஸ்ட்ரைக் முடிந்தாலும் நாங்க சும்மா இருக்க மாட்டோம் என்று கோதாவில் குதித்திருக்கிறது தியேட்டர் அதிபர்கள் சங்கம்.
தமிழ் சினிமா ஏற்கனவே மிக மோசமான சூழலில் இருக்கிறது. வெளியாகும் படங்களில் 10 சதவீத படங்கள் கூட லாபம் பார்ப்பதில்லை. படம் எடுப்பதிலும் சரி, ரிலீஸ் பண்ணுவதிலும் சரி, சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம். ஆனால் க்யூப் பிரச்னையை காரணம் காட்டி மார்ச் 1 முதல் ஸ்ட்ரைக் அறிவித்தார்கள். பிற மாநில சங்கங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஸ்ட்ரைக்கில் இருந்து பின்வாங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்னும் ஸ்ட்ரைக்கை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
சங்கத் தலைவரின் படம் ரிலீஸாகவிருக்கிறது. சரியாக மார்ச் இறுதியில் ஸ்ட்ரைக் முடியும்போது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று தான் ஜனவரி இறுதியிலேயே மார்ச் 29 ரிலீஸ் என்று அறிவித்தார் தலைவர். ஆனால் இப்போது தியேட்டர் அதிபர்கள் ஸ்ட்ரைக் நடக்கவிருப்பதால் அந்த ஸ்ட்ரைக் முடிந்து தியேட்டர்கள் திறக்கும்போது சூப்பர் ஸ்டாரின் காலா ரிலீஸ் ஆகும்.
அதனுடன் போட்டி போட்டால் தாக்கு பிடிக்க முடியாது. இன்னும் தள்ளி போட வேண்டும். வட்டி எகிறுமே என்று பல்லை கடிக்கிறாராம் தலைவர்.