Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'தம்பி விஜய்... இதான் கரெக்ட்.. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க!'
சென்னை: இனி ஆண்டுக்கு இரு படங்கள் செய்வேன் என்று அறிவித்துள்ள விஜய்யை திரையரங்க உரிமையாளர் சங்கம் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்பு தம்பி விஜய்,
இன்றைய தினம் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
அழிந்து வரும் திரையரங்குகளைக் காக்க தாங்கள் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும் ஆண்டுக்கு மூன்று படங்களாவது நடிக்க வேண்டும் என கடந்த வாரம் பத்திரிகை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
அதை ஏற்று, இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருவதாக அறிக்கை வெளியிட்டு, திரையரங்குகளைக் காப்பாற்ற நான் தயார் என உணர்த்தியதோடு, மற்ற கலைஞர்களுக்கும் முன் மாதிரியாகத் திகழும் உங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.