Don't Miss!
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தியேட்டர்களை திறக்க அனுமதிக்கணும், கேளிக்கை வரியை ரத்து செய்யணும்.. தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை
சென்னை: திரையரங்குகளை உடனே திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக தமிழ்நாடு தியேட்டர்கள் மற்றும் மல்ட்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
திரையரங்க தொழில் மூலம் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.
ஆடையேதும் அணியாமல்.. போர்வை புடைசூழ.. மொத்த அழகையும் காட்டி.. எங்கே போகிறார் இந்த இலங்கை அழகி!
வாழ்வாதாரம்
திரையரங்குகள் மூடப்பட்டபின், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பிற தொழில்களுக்கு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியது போல் திரையரங்க தொழிலை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.
கால அவகாசம்
அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த 2 வார கால அவகாசம் தேவைப்படுவதால், அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டு திரையரங்க உரிமையாளர்கள் முன்தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம். தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகிறது. இவற்றில் தனி திரையரங்குகள் 700 உள்ளன. 2 மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்ட ‘மால் மல்டிபிளக்ஸ்‘ 300 உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி
தற்போது நடைமுறையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான 8 சதவீத கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் டிக்கெட் கட்டணம் குறையும். அதிக எண்ணிக்கையில் மக்கள் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். தனி திரையரங்குகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
திருப்பூர் சுப்பிரமணியன்
தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில், திரையரங்குகளின் மின் கட்டணத்தில் 50 சதவீத சலுகை தர வேண்டுகிறோம். சொத்து வரியையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். தமிழகத்தில் காலங்காலமாக இயங்கிவரும் தனித்திரையரங்கு களை காத்திட மத்திய மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதை இந்த சங்கத்தின் தலைவர், திருப்பூர் சுப்பிரமணியன் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.