Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஸ்டிரைக் முடிகிறது: தியேட்டர்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படக்கூடும்
சென்னை: கேளிக்கை வரி விதிப்பு குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சினிமாவுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசு 30 சதவீத கேளிக்கை வரியை விதித்துள்ளது. இதை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சினிமா துறையினர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறியிருப்பதாவது,
கேளிக்கை வரி குறித்து அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை தியேட்டர்கள் மீண்டும் செயல்படும்.
இருப்பினும் இதுவரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.