Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில் பல லட்சம் நகை, பணம் திருட்டு
சென்னை: பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, வெள்ளிப்பொருட்கள் திருடுபோயுள்ளன. இதுகுறிந்து வேலைக்கார பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கதாநாயகி, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சச்சு. சினிமாவிற்குப் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார்.
இவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வாய்மொழி மூலமாக புகார் ஒன்றை கூறியுள்ளார்.
தனது வீட்டு பீரோவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக சுமார் 40 பவுன் நகைகளும், ரொக்கப்பணமும், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களும் திருட்டுப்போய்விட்டதாகவும், வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும் நடிகை சச்சு தெரிவித்தார். இது தொடர்பாக, அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எழுத்து மூலமாக புகார் கொடுக்காததால், இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சச்சுவின் வீட்டில் 3 வேலைக்கார பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, வெள்ளிப்பொருட்கள் திருடுபோயுள்ளன. இதுகுறிந்து வேலைக்கார பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கதாநாயகி, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சச்சு. சினிமாவிற்குப் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார்.
இவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வாய்மொழி மூலமாக புகார் ஒன்றை கூறியுள்ளார்.
தனது வீட்டு பீரோவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக சுமார் 40 பவுன் நகைகளும், ரொக்கப்பணமும், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களும் திருட்டுப்போய்விட்டதாகவும், வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும் நடிகை சச்சு தெரிவித்தார். இது தொடர்பாக, அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எழுத்து மூலமாக புகார் கொடுக்காததால், இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சச்சுவின் வீட்டில் 3 வேலைக்கார பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.