Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இமான் அண்ணாச்சி வீட்டில் திருட்டு.. 41 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் மாயமானதாக போலீசில் புகார்
இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் இமான் அண்ணாச்சி. சென்னை காதல், தலைநகரம், கோ, ஜில்லா, சாமி 2 என பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பிற்கு இடையே தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இவரது, சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகவும் பிரபலம். இவர் சென்னை அரும்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இமான் அண்ணாச்சி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர், தனது வீட்டில் பீரோவில் இருந்த 41 சவரன் நகைகளும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். வீட்டில் ஆட்கள் இருந்த போதே, நகைகள் காணாமல் போனதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
தளபதி 63 பட துணை நடிகை பரபரப்பு புகார்: அட்லி விளக்கம்
இந்தப் புகாரின் அடிப்படையில் அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், தியாகராயநகரில் உள்ள நடிகை வடிவுக்கரசி வீட்டிலும் இதே போல், நகை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.