Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இமான் அண்ணாச்சி வீட்டில் திருட்டு.. 41 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் மாயமானதாக போலீசில் புகார்
இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் இமான் அண்ணாச்சி. சென்னை காதல், தலைநகரம், கோ, ஜில்லா, சாமி 2 என பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பிற்கு இடையே தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இவரது, சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகவும் பிரபலம். இவர் சென்னை அரும்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இமான் அண்ணாச்சி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர், தனது வீட்டில் பீரோவில் இருந்த 41 சவரன் நகைகளும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். வீட்டில் ஆட்கள் இருந்த போதே, நகைகள் காணாமல் போனதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
தளபதி 63 பட துணை நடிகை பரபரப்பு புகார்: அட்லி விளக்கம்
இந்தப் புகாரின் அடிப்படையில் அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், தியாகராயநகரில் உள்ள நடிகை வடிவுக்கரசி வீட்டிலும் இதே போல், நகை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.