Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
‘’மெர்சல்’’ தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி !
சென்னை : மெர்சல் படத்தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
திடீரென வைரலாகும் விஜே சித்ராவின் உருக வைக்கும் வீடியோ...காரணம் இது தான்
தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் லேசான மாரடைப்புத்தான் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர்
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் (டி.எஃப்.பி.சி) தலைவராக முரளி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகளும், டி.ராஜேந்தர் 337 வாக்குகளும் பெற்றனர். பி.எல்.தேனப்பன் 87 வாக்குகள் பெற்றுள்ளார். டி.ராஜேந்திரை விட 220 வாக்குகள் அதிகம் பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்வாக தேர்வானார்.
தயாரிப்பாளர்
விலங்குகளை வைத்துப் படமெடுத்த பிரபலமான இயக்குநர் ராம.நாராயணன், தான் இயக்கிய 80க்கும் மேற்பட்ட படங்களைத் தன்னுடைய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார்.அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் முரளி ராமசாமியும், அவருடைய மனைவி ஹேமா ருக்மணியும் நிறுவனத்தை நடத்தி பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் கடைசியாக அட்லீ இயக்கி விஜய் 3 வேடத்தில் நடித்த மெர்சல் திரைப்படத்தை தயாரித்தார்.
ராட்சத குரங்கு படம்
தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ராட்சத மனித குரங்கு சூப்பர் ஹீரோ திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. கபி திரைப்படம் எனபெயரிடப்பட்டுள்ள இந்த படம் வேறலெவலில் உருவாகி வருகிறது. இந்த படத்தி முரளி ராமநாயணன் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் லேசான மாரடைப்புதான் என்றும், அவர் விரைவில் குணமடைந்துவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.