Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா துறையில் பலாத்காரமே இல்லை, சம்மதத்துடனே நடக்கிறது: நடிகை பகீர் தகவல்
மும்பை: சினிமா துறையில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார் பிக் பாஸ் 11 டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டே.
இந்தி தொலைக்காட்சி தொடரில் அண்ணியாராக நடித்து பிரபலமான ஷில்பா ஷிண்டே பிக் பாஸ் 11 டைட்டிலை வென்றார். அவர் பாலிவுட்டில் நடக்கும் மீ டூ பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
மீ டூ பற்றி ஷில்பா ஷிண்டே கூறியிருப்பதாவது,
சம்பவம்
சுத்த அபத்தமானது. சம்பவம் நடக்கும் போதே அது குறித்து பேச வேண்டும். அதை விட்டுவிட்டு பல ஆண்டுகள் கழித்து பேசுவதில் பலன் இல்லை. சம்பவம் நடந்து வெகு காலம் கழித்து பேசினால் யாரும் கேட்க மாட்டார்கள். உடனுக்குடன் செயல்பட வேண்டும். அதற்கு அதிகாரம் வேண்டும். சினிமா துறை நல்லதும் கிடையாது, மோசமும் கிடையாது.
புகார்
எல்லா இடங்களிலும் அனைத்தும் நடக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் அனைவரும் சினிமா துறையின் பெயரை கெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. சினிமா துறையில் இருக்கும் அனைவரும் தவறானவர்களா? நிச்சயம் இல்லை. எல்லாமே நம்மை பொருத்தது. இங்கு நடப்பது கொடுத்து வாங்குவது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை.
சம்மதம்
சினிமா துறையில் பாலியல் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இரு தரப்பு சம்மதத்துடன் தான் நடக்கிறது. இதையே தான் நான் முன்பும் தெரிவித்துள்ளேன். அவர்கள் சொல்வது போன்று செய்ய பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுவது தானே. அதை விட்டுவிட்டு புகார் தெரிவிப்பது சரி இல்லை என்கிறார் ஷில்பா ஷிண்டே.
ஆலோக் நாத்
பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கை தனக்கு போதைப் பொருள் கொடுத்து பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஆலோக் நாத் தன்னை பலாத்காரம் செய்ததாக இயக்குனர் வின்டா நந்தா கூறினார். இந்நிலையில் ஷில்பா ஷிண்டே இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.