Don't Miss!
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
விவசாயத்தை அழித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாட்டையடியாக வரும் 'தெரு நாய்கள்'!
'இயற்கைக்கும் மக்கள் வாழ்வாதாரங்களுக்கும் பேராபத்து விளைவிக்கும் மொத்த திட்டங்களையும் தமிழகத்தின் பக்கம் தள்ளிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது மத்திய அரசு' என்ற தமிழ் ஆர்வலர்களின் குற்றச்சாட்டை மெய்யாக்குவது போலவே மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன.
குறிப்பாக மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றை எவ்வளவோ எதிர்த்தாலும், மைய அரசு அசைந்து கொடுக்க மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது.
நிஜத்தில் நடக்கும் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து 'தெரு நாய்கள்' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி உள்ளார் ஹரி உத்ரா என்ற புதிய இயக்குநர். பல கலை இயக்குநர்களுடன் உதவியாளராகப் பணிபுரிந்தவர் ஹரி உத்ரா.
அப்புக்குட்டி, பிரதிக், தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அக்ஷ்தா என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். ஹரிஷ், சதீஷ் ஆகியோர் இணைந்து இசையமைக்க, தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன் என்ற நிறுவனம் சார்பில் சுசில்குமார், உஷா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படம் பற்றி இயக்குநர் ஹரி உத்ரா கூறுகையில், "அரசாங்கமும், கார்ப்ரேட் நிறுவனங்களும் சேர்ந்து விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றி வருகின்றன. எரிவாயு எடுக்கிறோம் என்று கூறி மக்கள் வாழ்வாதரத்தை அடியோடு அழிக்கும் முயற்சி இது.
இதை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கதையின் நாயகர்கள்தான்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குறிவைத்து தாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான படமாக இது இருக்கும். ஆனால், இப்படத்தில் எந்த தனிப்பட்ட கம்பெனியையும், தனிப்பட்ட நபரையும் குறிவைத்து படமாக்கவில்லை. அரசியல்வாதிகளையும் குறிப்பிட்டுத் தாக்கவில்லை.
இந்தத் தலைப்பை வைக்கும்போதே, இதற்கு நிச்சயம் எதிர்க் கருத்து வரும் என எனக்கும் தெரியும். ஆனால் படம் பார்த்த பிறகு அது எந்த அளவு பொருத்தமானது என்பது உங்களுக்கே புரியும்," என்றார்.
படம் முழுக்க தஞ்சை, மன்னார்குடி பகுதியிலேயே எடுக்கப்பட்டுள்ளது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!