Don't Miss!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Finance HDFC வங்கி-யின் இன்ப அதிர்ச்சி.. லாபம், வருவாய் உடன் டிவிடெண்ட் அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பிக்பாஸ் அல்டிமேட் ஃபைனலிஸ்ட் ஆன 3 பேர்... டைட்டிலை வெல்லப் போவது யார்?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடைசி வரை போராடி இறுதிப் போட்டிக்கு மூன்று போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் யார் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசன் டைட்டிலை வெல்ல போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் நாளை வரை காத்திருக்க வேண்டும்.
ஜனவரி 31 ம் தேதி 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. ஓடிடி வெர்சனாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. முதலில் கமல் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை, அவர் விலகிய பிறகு சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
கையில் கிளாஸ்.. பார்ட்டி கொண்டாடிய இயக்குநர்.. பப்ளிக்கா கிஸ் அடிச்ச நடிகை.. அந்த கவலையே இல்லையே?
பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்
14 போட்டியாளர்களுடன், வைல்ட் கார்டு என்ட்ரியாக கலக்க போவது யாரு சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் வந்தனர். வனிதா விஜயக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், சுஜா வருணி, ஷாரிக், அனிதா, சினேகன், தாடி பாலாஜி, சதீஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஃபினாலே வாரத்தில் இறுதி போட்டியாளர்களாக நிரூப், அபிராமி, தாமரை, பாலா, ஜுலி, சுருதி, ரம்யா பாண்டியன் ஆகிய 7 பேர் இருந்தனர்.
பணப்பெட்டியை வென்ற சுருதி
இவர்களில் 15 லட்சம் பணப்பெட்டியை ஜுலியுடன் பல கட்ட போட்டிகளை எதிர்கொண்டு, வெற்றி பெற்று, பணப்பெட்டியுடன் வெளியேறினார் சுருதி. அவரைத் தொடர்ந்து அபிராமி எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். இதனால் இறுதிப் போட்டிக்கு 5 பேர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தாமரை மற்றும் ஜுலி ஆகியோரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஃபைனலில் மூன்று பேர்
இதனால் நிரூப், ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களில் வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்த ரம்யா பாண்டியன் முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு சென்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட பிசிக்கல் டாஸ்கின் போது காலில் காயம் ஏற்பட்டதுடன் தொடர்ந்து விளையாடி, இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்.
எப்போ ஃபினாலே
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏப்ரல் 10 ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. ஃபினாலே எபிசோட்டை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலேவிற்கு ஸ்பெஷல் கெஸ்ட் என யாரும் வரவில்லையாம். அதற்கு பதிலாக இதுவரை வெளியேறி சென்ற போட்டியாளர்கள், முந்தைய பிக்பாஸ் டிவி வெர்சன்களின் 5 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஸ்பெஷல் கெஸ்ட்
பிக்பாஸ் அல்டிமேட்டில் இது ஃபினாலே வாரம் என்பதால் இதற்கு முன் வெளியேறி சென்ற போட்டியாளர்கள் கெஸ்டாக வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அனிதா, ஷாரிக், தாடி பாலாஜி, சாண்டி மாஸ்டர், அபினய் ஆகியோர் கெஸ்டாக வந்துள்ள நிலையில் இன்று பிரியங்கா, சுரேஷ் தாத்தா, பாவனி ஆகியோர் கெஸ்டாக வர உள்ளனர். இந்த எபிசோட் இன்று இரவு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.