Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிறந்த நாள் கொண்டாடிய தியாகராஜன்... சரோஜாதேவி வாழ்த்து!
நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் தியாகராஜன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.
அவருக்கு மூத்த நடிகைகள் சரோஜா தேவி, அம்பிகா, நளினி உள்பட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான பிரசாந்த் கோல்ட் டவர்சில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.
அலைகள் ஓய்வதில்லை
அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் நடிகராக அறிமுகமானார் தியாகராஜன். மலையூர் மம்பட்டியான் படத்தில் நாயகனாக நடித்து பெரும் வெற்றிப் பெற்றார். தொடர்ந்து கொம்பேறி மூக்கன், நல்ல நாள், நீங்கள் கேட்டவை, எரிமலை, நெருப்புக்குள் ஈரம், தீச்சட்டி கோவிந்தன், காவல் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
எண்பதுகளில் ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தியாகரான். பாயும் புலி, ஜான் ஜானி ஜனார்தன் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் அடைக்கலம் என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
மகனுக்காக
மகன் பிரசாந்த் பரபரப்பாக நடிக்க ஆரம்பித்ததும் தான் நடிப்பதை நிறுத்திக் கொண்டு மகனை முன் நிறுத்துவதிலேயே முனைப்பு காட்டினார். பிரசாந்தை வைத்து ஆணழகன், ஷாக், மம்பட்டியான், பொன்னர் சங்கர் போன்ற படங்களை தயாரித்து இயக்கினார்.
புதிய படம்
இப்போதும் பிரசாந்தை வைத்து புதிய படங்களை தயாரிக்கவும், இயக்கவும் திட்டமிட்டுள்ளார் தியாகராஜன்.
பிறந்த நாள்
இந்த நிலையில் இன்று தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள பிரசாந்த் கோல்ட் டவர்ஸில் இன்று கொண்டாடினார் தியாகராஜன். அவருக்கு மூத்த நடிகை சரோஜா தேவி கேக் ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறினார். நடிகைகள் அம்பிகா, நளினி, பூர்ணிமா, நடிகர் நாசர், இயக்குநர் பாக்யராஜ், ராஜகுமாரன், சின்னி ஜெயந்த் உள்பட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த மில்லினியத்தின் சிறந்த தந்தை
தியாகராஜனுக்கு இந்த மில்லினியத்தின் சிறந்த தந்தை என்ற விருதினை வழங்கி பாராட்டினார் ஜோய் ஆலூக்காஸ் சேர்மன் ஜோய்.
வாழ்த்த வந்த அனைவரையும் வரவேற்றார் நடிகர் பிரசாந்த்.