Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தில்லு முல்லு 2 படத்திற்கு தடை கோரிய விசுவின் மனு தள்ளுபடி: படம் நாளை ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தை தில்லு முல்லு 2 என்ற பெயரில் எடுத்துள்ளனர். இதில் ரஜினி கதாபாத்திரத்தில் சிவா நடித்துள்ளார். படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி இயக்குனர் விசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
தில்லு முல்லு படத்துக்கு நான் தான் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். தற்போது அந்த படத்தை "தில்லு முல்லு 2" என்ற பெயரில் வேந்தர் மூவிஸ் தயாரித்து உள்ளது. இதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே "தில்லு முல்லு 2" படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுதாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில்,
கோல்மால் என்ற இந்தி படம் தமிழில் தில்லு முல்லு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு உரிய பணம் கொடுத்துவிட்டு தான் தில்லு முல்லு 2 தயாரிக்கப்பட்டுள்ளது. விசுவின் வசனத்தையோ, திரைக்கதையையோ பயன்படுத்தவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து விசுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.