Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தில்லு முல்லு 2 படத்திற்கு தடை கோரிய விசுவின் மனு தள்ளுபடி: படம் நாளை ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தை தில்லு முல்லு 2 என்ற பெயரில் எடுத்துள்ளனர். இதில் ரஜினி கதாபாத்திரத்தில் சிவா நடித்துள்ளார். படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி இயக்குனர் விசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
தில்லு முல்லு படத்துக்கு நான் தான் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். தற்போது அந்த படத்தை "தில்லு முல்லு 2" என்ற பெயரில் வேந்தர் மூவிஸ் தயாரித்து உள்ளது. இதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே "தில்லு முல்லு 2" படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுதாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில்,
கோல்மால் என்ற இந்தி படம் தமிழில் தில்லு முல்லு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு உரிய பணம் கொடுத்துவிட்டு தான் தில்லு முல்லு 2 தயாரிக்கப்பட்டுள்ளது. விசுவின் வசனத்தையோ, திரைக்கதையையோ பயன்படுத்தவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து விசுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.