மீண்டு(ம்) வரும் திருமலை இயக்குநர் ரமணா... அரவிந்த்சாமி மஞ்சுவாரியர் ஜோடி
சுள்ளான், திருமலை, ஆதி படங்களை இயக்கியவர் இயக்குநர் ரமணா. கமர்ஷியல் இயக்குநராக வலம் வந்த நேரத்திலேயே, நடிக்கவும் முடிவு செய்தார். அவர் நடிக்கவிருந்த படத்துக்கு தலைப்பு குதிரை.

ஆனால் அப்போதுதான் அவருக்கு புற்றுநோய் தாக்கியது. ரமணாவின் சினிமா கேரியரும் முடிவுக்கு வந்தது.

சிகிச்சைக்குப் பிறகு சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த ரமணா இப்போது தேறிவிட்டார். அதே பழைய வேகத்தோடு படம் இயக்கவும் தயாராகி விட்டார். இந்த படத்தில் அரவிந்த்சாமியும், மஞ்சு வாரியரும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வண்ணம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விரைவில் முறையான அறிவிப்பு வரலாம்!


Click it and Unblock the Notifications











