Don't Miss!
- Finance Adani: விதிமுறைகள் மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- News ஒரு நொடி தான்..நடுவானில் சிதறிய ஹெலிகாப்டர்கள்! உறைந்து போன மக்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருநாளை திரளாக வந்து ரசிக்கிறார்கள் மக்கள்!- இயக்குநர் ராம்நாத்
திருநாள் படத்தை மக்கள் திரளாக வந்து ரசிக்கிறார்கள். கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று இயக்குநர் ராம்நாத் கூறியுள்ளார்.
ராம்நாத் இயக்கத்தில் நயன்தாரா, ஜீவா, ஜோ மல்லூரி உள்ளிட்டோர் நடித்த படம் திருநாள்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. கபாலி வெளியாகி ஒரு வாரத்தில் வந்தாலும், உலகெங்கும் 600 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது.
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக அதன் இயக்குநர் ராம்நாத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "திருநாள் படத்துக்கு முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நயன்தாரா - ஜீவாவின் பாத்திரங்களை மக்கள் அந்த அளவு ரசிக்கிறார்கள். நானே நேரில் போய் பார்த்த பல அரங்குகளில் படத்துக்கு நல்ல கூட்டம்.
தமிழகத்தின் உள்ளார்ந்த மாவட்டங்களில், குறிப்பாக கதை நிகழும் திருச்சி - தஞ்சைப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் 'திருநாள்' அதன் பெயருக்கேற்ற கூட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தைப் பார்த்த பலர், பல காட்சிகளில் தங்களைப் பார்த்ததாக என்னிடம் கூறினார்கள். அதுதான் இந்தப் படத்துக்கான வெற்றியாகப் பார்க்கிறேன். எதிர்மறை விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களும் பாராட்டும்படி என் அடுத்த படைப்பைத் தருவேன்," என்றார்.