Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருநாளை திரளாக வந்து ரசிக்கிறார்கள் மக்கள்!- இயக்குநர் ராம்நாத்
திருநாள் படத்தை மக்கள் திரளாக வந்து ரசிக்கிறார்கள். கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று இயக்குநர் ராம்நாத் கூறியுள்ளார்.
ராம்நாத் இயக்கத்தில் நயன்தாரா, ஜீவா, ஜோ மல்லூரி உள்ளிட்டோர் நடித்த படம் திருநாள்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. கபாலி வெளியாகி ஒரு வாரத்தில் வந்தாலும், உலகெங்கும் 600 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது.
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக அதன் இயக்குநர் ராம்நாத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "திருநாள் படத்துக்கு முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நயன்தாரா - ஜீவாவின் பாத்திரங்களை மக்கள் அந்த அளவு ரசிக்கிறார்கள். நானே நேரில் போய் பார்த்த பல அரங்குகளில் படத்துக்கு நல்ல கூட்டம்.
தமிழகத்தின் உள்ளார்ந்த மாவட்டங்களில், குறிப்பாக கதை நிகழும் திருச்சி - தஞ்சைப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் 'திருநாள்' அதன் பெயருக்கேற்ற கூட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தைப் பார்த்த பலர், பல காட்சிகளில் தங்களைப் பார்த்ததாக என்னிடம் கூறினார்கள். அதுதான் இந்தப் படத்துக்கான வெற்றியாகப் பார்க்கிறேன். எதிர்மறை விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களும் பாராட்டும்படி என் அடுத்த படைப்பைத் தருவேன்," என்றார்.