Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சம்பளம் வாங்காமல் நடித்த முதல் ஹீரோ அவர்தான்.. ரஜினியை புகழ்ந்து தள்ளிய திருப்பூர் சுப்பிரமணியம்!
சென்னை: சம்பளம் வாங்காமல் நடித்த முதல் ஹீரோ நடிகர் ரஜினிகாந்துதான் என மூத்த விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் புகழ்ந்துள்ளார்.
Recommended Video
மூத்த விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனான நட்பு குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
திரைப்பட சகோதரத்துவத்தில் இருப்பவர்களுக்காக படங்கள் திரையிடப்படும்போது, திரைப்படங்களைப் பற்றிய தனது கருத்தை அவர் எவ்வாறு நம்புகிறார், மதிக்கிறார் என்பது பற்றியும் விரிவாகப் பேசியிருந்தார்.
தேனை விட தித்திப்பானவள்.. ஒரே ஒரு 'நாட்'ட போட்டு இளைஞர்களை நாக் அவுட் செய்யும் பிரபல நடிகை!
முதல் ஹீரோ ரஜினி
நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என்று குறிப்பிட்டு பேசிய திருப்பூர் சுப்பிரமணியம் அவர் மீது தனக்கு அதிக மரியாதை இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தன்னைப் பொறுத்தவரை, சம்பளமின்றி படத்தில் நடித்த முதல் தமிழ் ஹீரோ ரஜினி தான் கூறியுள்ளார்.
வேலைக்காரன் படம்
மேலும் ஸ்ரீராகவேந்திரா படம் தோல்வி அடைந்ததால் கவிதாலயா புரடெக்ஷனுக்காக வேலைக்காரன் படத்திற்கு எந்த சம்பளமும் வாங்காமல் நடித்தார் நடிகர் ரஜினிகாந்த். அந்தப் படம் அவரது 100வது படமாகும்.
பாபா தோல்வியின் போது
பாபா படம் தோல்வியை தழுவிய போதுக்கூட நடிகர் ரஜினிகாந்த் எவ்வளவு தாராளமாக இருந்தார் என்பதையும் திருப்பூர் சுப்பிரமணியம் நினைவு கூர்ந்தார். அதாவது நடிகர் ரஜினிகாந்த் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் பாபா படத்தால் நஷ்டமடைந்தவர்கள் குறித்த தகவலை என்னிடம் கேட்டார்.
அப்படி செய்த முதல் நடிகர்
மேலும் இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்றும் அவர் என்னிடம் உதவிக் கேட்டார். தன்னால் நஷ்டமடைந்தவர்களுக்கு அதனை ஈடுக்கட்ட முயற்சி செய்த முதல் நடிகரும் அவர்தான். அது அவருடைய அக்கறையுள்ள மனதைக் காட்டுகிறது. சூப்பர் ஸ்டார், ஒரு கட்டத்தில், வடக்கு ஆர்காடு, தெற்கு ஆர்காடு மற்றும் செங்கல்பட்டு பகுதிகளுக்கான உரிமைகளை தனது சம்பளமாகக் கேட்டிருந்தார்.
பெரிய இதயம் இருந்தது
இன்று, பல ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்துகிறார்கள், இது தொழில்துறைக்கு ஆரோக்கியமற்ற போக்கு. தன்னுடைய தகுதி என்று நினைத்த சம்பளத்தை மட்டுமே கேட்க அவருக்கு ஒரு பெரிய இதயம் இருந்தது என நடிகர் ரஜினிகாந்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் மூத்த விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம்.