Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வலுக்கட்டாயமாக ஹீரோயினுக்கு தாலிக்கட்டிய ஹீரோ.. சீரியல் புரமோவுக்கு வார்னிங் கொடுத்த ஐபிஎஸ் அதிகாரி!
சென்னை: விஜய் டிவியின் புதிய சீரியல் புரமோவை பார்த்த ஐபிஎஸ் அதிகாரி தண்டனை விவரங்களை பகிர்ந்து வார்னிங் கொடுத்துள்ளார்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் சீரியல்களை நம்பிதான் பிழைப்பு நடத்தி வருகின்றன.
கொடும் இதய நோய்.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவி தேவை!
காலை 7.30 மணிக்கு தொடங்கும் சிரியல்கள் இரவு 12 மணி வரை ஒளிபரப்பாகி வருகின்றனர்.
குடும்பத்தை கலைப்பது..
கன்டென்ட்டே இல்லாவிட்டாலும் நடப்பது, ஓடுவது என காட்டி ஒரு வாரத்தை ஓட்டி விடுகின்றன. அதை விட்டால் ஒட்டுக்கேட்பது, போட்டுக் கொடுப்பது, குடும்பத்தை கலைப்பது, கணவன் மனைவியை சேரவிடாமல் பிரிப்பது என ஓட்டி வருகின்றனர்.
மூட நம்பிக்கைகள்..
பெரும்பாலாமான சீரியல்களின் கான்செப்ட் சமூகத்துக்கு கொஞ்சமும் ஆரோக்கியமற்றதாகவே உள்ளது. பெண்களை வில்லிகளாக சித்தரிப்பது, மூட நம்பிக்கைகளை பரப்புவது போன்றே அமைக்கப்பட்டு வருகின்றன.
தென்றல் வந்து என்னை தொடும்
இந்நிலையில் அதுபோன்று ஒரு சீரியல் புரமோ வெளியாகி வறுபட்டு வருகிறது. அதாவது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியலின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஹீரோ கன்னத்தில் பளார்
இதில் கோவிலில் ரகசிய திருமணம் செய்யும் ஜோடியை மிரட்டும் ஹீரோ, அந்த பெண் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் தாலியை அறுக்க முயற்சிக்கிறார். அப்போது அங்கு வரும் சீரியலின் ஹீரோயின் அந்த ஹீரோவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.
தாலி கட்டிய ஹீரோ
அதோடு தாலியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அட்வைஸ் செய்கிறார். அப்போது அந்த ஹீரோயினின் கையை பிடித்து இழுத்து செல்லும் ஹீரோ, சாமி சிலையின் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து ஹீரோயின் கழுத்தில் போடுகிறார். அதோடு நெற்றியிலும் குங்குமம் வைத்து விடுகிறார்.
நீ என்ன பொண்டாட்டியா?
தொடர்ந்து பேசும் அந்த ஹீரோ, இப்போ உனக்கு தாலி கட்டிட்டேன், பொட்டும் வச்சுட்டேன், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா என கேட்டுவிட்டு செல்கிறார். இவை எதற்குமே எதிர்ப்பு தெரிவிக்காத அந்த ஹீரோயின் செண்டிமென்ட்டாக பார்ப்பதோடு, அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு ஃபீலோடு ஹீரோவை கண்ணீர்விட்டு பார்க்கிறார்.
வார்னிங் கொடுத்த எஸ்பி
இப்படியாக உள்ளது அந்த புரமோ. இந்த புரமோவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த புரமோவை பார்த்த திருவள்ளூர் மாவட்ட எஸ்பியான வருண்குமார் ஐபிஎஸ், இதுபோன்று நடந்தால் என்னென்ன தண்டனை கிடைக்கும் என்ற விவரங்களை பகிர்ந்து வார்னிங் கொடுத்துள்ளார்.
3 வருஷம் ஜெயில்
அதன்படி கோவில், கல்வி பயிலும் இடங்கள், பேருந்துநிலையம், சாலைகள், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர், பார்க், பீச், விழா நடக்கும் இடங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் போன்ற பொது இடங்களில் பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குறைந்தது 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.