Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கீர்த்தி சுரேஷின் முடியை பிடித்து தர தரவென இழுத்துச் சென்றேன்: ஹரிஷ் உத்தமன்
சென்னை: தொடரி படத்தில் வரும் ஒரு காட்சியில் தான் கீர்த்தி சுரேஷை முடியை பிடித்து தர தரவென இழுத்துச் சென்றதாக வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் தெரிவித்துள்ளார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தொடரி. நாளை ரிலீஸாக உள்ளது. பாண்டிய நாடு புகழ் ஹரிஷ் உத்தமன் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் படம் பற்றி கூறுகையில்,
ரயில்
துவக்கம் முதல் இறுதி வரை ரயிலில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் தொடரி. நான் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வரும் கமாண்டோவாக நடித்துள்ளேன். ரயிலில் வரும் போது நடக்கும் சம்பவங்கள் தான் படம்.
தனுஷ்
தனுஷ் மிகவும் ஒத்துழைப்பு அளித்தார். நானும், தனுஷும் ஓடும் ரயிலின் மேல் சண்டை போடும் காட்சி உள்ளது. அந்த காட்சியில் கயிறு இல்லாமல் நடித்தோம். தனுஷ் பெரிய ஸ்டாராக இருந்தாலும் மிகவும் எளிமையானவர்.
நக்சலைட்டுகள்
ஒடிஷா மாநிலத்தில் உள்ள ரயகடாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவைப்படும்போது வந்து ஆட்களை கட்ததிச் செல்வார்கள் என்றும் கிராமத்தினர் தெரிவித்தனர். அதை கேட்டு பயமாகவும், த்ரில்லாகவும் இருந்தது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் அருமையான நடிகை. ஒரு காட்சியில் நான் அவரின் முடியை பிடித்து தர தரவென இழுத்துச் செல்ல வேண்டும். இந்த காட்சியை இயக்குனர் என்னிடம் விளக்கியதும், நான் கீர்த்தியிடம் சென்று காட்சியை கூறி உங்களுக்கு வலிக்கும் என்றேன். அவரோ பரவாயில்லை, நடிக்கலாம் என்றார்.