Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜெயிக்கணும்னா... வில்லத்தன சுதீப்புக்கு வெறித்தென வசனம் எழுதிய ஹீரோ!
மும்பை: வில்லனாக நடிக்கும் சுதீப்புக்கு பிரபல ஹீரோ எழுதிய வசனம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்து இந்தியில் ஹிட்டான படம், தபாங். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை அடுத்து, அடுத்த பாகம் உருவானது. 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் ஹிட்டானதை அடுத்து இப்போது 3 வது பாகம் உருவாகியுள்ளது.
ஹிப்ஹாப் ஆதியின்.. நான் சிரித்தால்.. இணைகிறார் ஐஸ்வர்யா மேனன்
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஓபனிங் பாடல் காட்சி சமீபத்தில் சர்ச்சையானது. அந்தப் பாடலில் சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிக்கு இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.இந்தப் படத்தில், பல்லி சிங் என்ற கேரக்டரில் வில்லனாக கன்னட ஹீரோ சுதீப் நடிக்கிறார். இவர் தமிழில், நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் வசனம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதைக் குறிப்பிட்டுள்ள சுதீப், தபாங் 3 படத்தில் எனக்குப் பிடித்த வசனம் இது. இதை எழுதியது, நடிகர் சல்மான் கான்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அந்த வெறித்தன வசனம் இதுதான்:
-நன்மைக்கும் தீமைக்குமான சண்டையில நன்மைக்குத்தான் வெற்றி கிடைக்கும்னு நீங்க கேள்விபட்டிருப்பீங்க. ஆனா, அது தப்பு. தீமைக்குத்தான் வெற்றிக் கிடைக்கும். ஏன்னா, ஜெயிக்கிறதுக்குத் தேவையான கெட்ட விஷயம் நல்லவன்கிட்ட இருக்காது.