Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'நான் கடவுள்' ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரனான சோகக் கதை தெரியுமா?
சென்னை: நான் கடவுள் புகழ் ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரன் ஆனது எப்படி என்று தெரியுமா?
இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படம் மூலம் பிரபலமானவர் மொட்டை ராஜேந்திரன். முன்பு ஸ்டண்ட் கலைஞராக இருந்த அவர் தற்போது காமெடியில் கலக்கி வருகிறார்.
ராஜேந்திரனின் பெயரை சொன்னாலே அவரது மொட்டைத் தலை தான் நினைவுக்கு வரும். அவருக்கும் ஒரு காலத்தில் தலைநிறைய முடி இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மலையாள படம் ஒன்றில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
சண்டைக் காட்சிப்படி ராஜேந்திரன் குளத்தில் குதிக்க வேண்டும். அவரும் குதித்துள்ளார். தொழிற்சாலை கழிவுகள் அதிக அளவில் கலந்து மாசு அடைந்திருந்த அந்த குளித்தில் குதித்த ராஜேந்திரனுக்கு உடலில் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது.
அதன் பிறகே அவரது தலைமுடி கொட்டி மொட்டையாகியுள்ளது. மேலும் அவரது புருவம் மற்றும் கண் இமைகளில் இருந்த முடியும் கொட்டிவிட்டது. முடியெல்லாம் கொட்டி மொழுக்கென்று இருக்கும் ராஜேந்திரனுக்கு மொட்டை ராஜேந்திரன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
குளத்தில் குதித்ததால் அவரின் குரலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிப்படுகிறது.