Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'நான் கடவுள்' ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரனான சோகக் கதை தெரியுமா?
சென்னை: நான் கடவுள் புகழ் ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரன் ஆனது எப்படி என்று தெரியுமா?
இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படம் மூலம் பிரபலமானவர் மொட்டை ராஜேந்திரன். முன்பு ஸ்டண்ட் கலைஞராக இருந்த அவர் தற்போது காமெடியில் கலக்கி வருகிறார்.
ராஜேந்திரனின் பெயரை சொன்னாலே அவரது மொட்டைத் தலை தான் நினைவுக்கு வரும். அவருக்கும் ஒரு காலத்தில் தலைநிறைய முடி இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மலையாள படம் ஒன்றில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
சண்டைக் காட்சிப்படி ராஜேந்திரன் குளத்தில் குதிக்க வேண்டும். அவரும் குதித்துள்ளார். தொழிற்சாலை கழிவுகள் அதிக அளவில் கலந்து மாசு அடைந்திருந்த அந்த குளித்தில் குதித்த ராஜேந்திரனுக்கு உடலில் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது.
அதன் பிறகே அவரது தலைமுடி கொட்டி மொட்டையாகியுள்ளது. மேலும் அவரது புருவம் மற்றும் கண் இமைகளில் இருந்த முடியும் கொட்டிவிட்டது. முடியெல்லாம் கொட்டி மொழுக்கென்று இருக்கும் ராஜேந்திரனுக்கு மொட்டை ராஜேந்திரன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
குளத்தில் குதித்ததால் அவரின் குரலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிப்படுகிறது.