Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தன்னந்தனியாக 'நயன்தாரா பேயை' பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு! ஒரு புது சவால்!!
நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தை தியேட்டரில் தன்னந்தனியாகப் பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு என்று அறிவித்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன்.
ஆனால் இந்த சவால் பேயுடன் மகா நட்பாகிவிட்ட தமிழ் ரசிகர்களுக்கு இல்லையாம்... தெலுங்கு ரசிகர்களுக்குத்தானாம்.
மாயா படம் நேற்று தமிழில் வெளியானது. இன்று தெலுங்கிலும் ரிலீஸாகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு மயூரி என்று தலைப்பிட்டுள்ளனர்.
தமிழில் ஓரளவு பரபரப்பு கிளப்பியுள்ள லஇந்தப் படத்துக்கு, தெலுங்கில் அவ்வளவு பப்ளிசிட்டி இல்லை.
எனவே மயூரியை தனியாக தியேட்டரில் பார்க்கும் ரசிகருக்கு ஒரு பெரிய வாய்ப்பைத் தந்துள்ளனர்.
இப்படத்தை தனியாக, தனது பல்ஸ் மற்றும் ரத்த அழுத்தத்தில் எந்த ஒரு மாற்றமுமின்றி, பயப்படாமல் படம் முழுவதையும் பார்த்து முடிப்பவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்படும். அதிலும் இந்த 5 லட்சத்தை நயன்தாரா அவரது கைகளால் வழங்குவார் என தயாரிப்பாளர் சி கல்யாண் அறிவித்துள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா...
படத்திலும் இதே போன்ற ஒரு காட்சி உள்ளது. ஒரு பேய்ப் படத்தை தன்னந்தனியாக தியேட்டரில் பார்க்கும் தைரியசாலிக்கு ரூ 5 லட்சம் பரிசு என ஒரு இயக்குநர் அறிவிக்க, அதை ஏற்று படம் பார்க்கும் ஒரு தயாரிப்பாளர் செத்துப் போவார். ஆனால் நயன்தாரா தைரியமாகப் பார்த்து பரிசை வெல்வார்!