நாங்க எவ்ளோ செஞ்சோம், எங்களுக்கு ஏன் சர்கார் அளவுக்கு பப்ளிசிட்டி கொடுக்கல: சி.எஸ். அமுதன்
சென்னை: எங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு பப்ளிசிட்டி கொடுக்கவில்லை என்று தமிழ் படம் 2 இயக்குனர் சி.எஸ். அமுதன் செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.
சர்கார் படத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை பலரும் இலவச விளம்பரமாகவே பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்க்க, எதிர்க்க படத்திற்கு தேசிய அளவில் விளம்பரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ் படம் 2 இயக்குனர் சி. எஸ். அமுதன் பாவம் ஃபீலிங்கில் உள்ளார்.
அமுதன்
தமிழ் படம் 2-ல் யாரையும் பாரபட்சமின்றி மரண கலாய் கலாய்த்திருந்தார்கள். அப்படி இருந்தும் தங்களின் படத்திற்கு சர்கார் அளவுக்கு விளம்பரம் கொடுக்கப்படவில்லை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்கிறார் அமுதன். பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் அவர். #IStandWithSarkaar. அவர் கோபம் நியாயம் தான். எவ்வளவு கலாய்ச்சாங்க, கேட்கத் தானே செய்வார்.
ரகசிய பதவியேற்பு
சமாதியில் அமர்ந்து தியானம் செய்தது, ரகசிய பதவியேற்பு விழாவில் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே பிரமாணம் எடுத்துக் கொண்டது என்று பார்த்து பார்த்து காட்சிகள் வைத்தவருக்கு கோபம் வரத்தானே செய்யும். நீ நடத்து தலைவா.
கமல்
கொளுத்திப் போடுவோம், காசா பணமா?
தமிழ் படம் 3
தமிழ் படம் 3 எடுக்க ஸ்க்ரிப்ட் கிடைத்துவிட்டது போல. வச்சு செய்வீங்க போலயே


Click it and Unblock the Notifications











