Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இதனால் தாம்பா அஜீத் ஓட்டு போட வரவில்லையாம்
சென்னை: வேதாளம் படத்தின் டப்பிங்கில் பிசியாக இருந்ததாலும், சங்கம் மீது கொண்ட அதிருப்தியாலும் அஜீத் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷாலின் பண்டவர் அணியும், சரத்குமார் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று ஏராளமான நடிகர், நடிகைககள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், விஜய்யும் காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டு சென்றனர். 'தல' அஜீத் முந்தைய நாள் இரவு 3 மணிவரை வேதாளம் படத்தின் டப்பிங்கில் பிசியாக இருந்தாராம்.
அதனால் மதியத்திற்கு மேல் அவர் வாக்களிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடைசி வரை வாக்களிக்க வரவே இல்லை. வாக்குச்சாவடியில் இரு அணியினருக்கும் இடையே நடந்த மோதலை பார்த்து அஜீத் அதிருப்தி அடைந்தாராம்.
மேலும் தான் சிக்கலில் இருந்த போது சங்கம் உதவவில்லையே என்ற அதிருப்தி வேறாம். இதனால் தான் அவர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.