Don't Miss!
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ரயில் நிலையத்தில் குயில் போன்று பாடும் பாட்டி: வைரலாகும் வீடியோ
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அமர்ந்திருந்த பாட்டி பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ரனகாட் ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் பிளாட்ஃபார்மில் அமர்ந்து இந்தி பாடல்களை பாடியுள்ளார். அதை வீடியோ எடுத்த ஒருவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் அந்த மூதாட்டி 1972ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ஷோர் படத்திற்காக லதா மங்கேஷ்கர் பாடிய ஏக் பியார் கா நக்மா ஹை பாடலை அவ்வளவு அழகாக பாடியுள்ளார். என்ன பெரிய வீடியோ என்று நினைத்து பார்த்துவிட்டு இந்த பாட்டிக்கு இப்படி ஒரு குரலா என்று வியக்காதவர்களே இல்லை எனலாம்.
பாட்டி பாட்டு பாடிய வீடியோ வைரலாகியுள்ளது. பிரபலங்களின் வீடியோக்களுக்கு இணையாக பாட்டியின் வீடியோவையும் பலரும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Old woman singing ‘एक प्यार का नगमा है’ in train station…
— Heem S. Shakya (@heemshakya) August 2, 2019
"She brought tears in my eyes. How beautiful she is and so is her voice," wrote 1. "What a voice, how very expressive," said 2nd. "Her voice is so beautiful," 3rd.#SuperSingerhttps://t.co/aWCPKqYwOr
வீடியோவை பார்த்தவர்கள் அதை வெளியிட்டவரிடம் அந்த மூதாட்டியின் தொடர்பு எண்ணை கேட்டார்கள். இதையடுத்து அவர் மூதாட்டியின் தொடர்பு எண்ணை பெற்றுள்ளார். என்ன ஒரு அழகான குரல், இந்த பெண் இளமையாக இருக்கும்போதே பாடகியாகி இருந்திருந்தால் இந்நேரம் பெரிய ஆளாகியிருப்பார். தற்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அவருக்கு படங்களில் பாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். கடவுள் அவரை ஆசிர்வதிப்பாராக என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
வீடியோவை பார்த்தால் நீங்களும் அவரின் குரலை நிச்சயம் பாராட்டுவீர்கள்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!