Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 2 hrs ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- Automobiles
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- News
மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்
- Lifestyle
இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த வருடம் சர்ச்சையை ஏற்படுத்திய 'நெபோடிசம்'.. ட்விட்டரில் இருந்து விலகிய நடிகைகள்!
சென்னை: இந்த வருடம் சினிமாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்று, 'நெபோடிசம்'.
பாலிவுட்டில் ஆரம்பித்து மொத்த இந்திய சினிமா துறையும் இந்த வார்த்தையை பயன்படுத்தியது.
மர்மநபர்கள் கைவரிசை.. பிரபல நடிகையின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கம்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை!
அது தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் கொடி கட்டிப் பறந்தன சோசியல் மீடியாவில்.

நெபோடிசம் பேச்சு
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்ட பிறகு நெபோடிசம் பற்றிய பேச்சு பாலிவுட்டில் பரபரப்பாகத் தலைதூக்கியது. அவரைக் கொன்றது பாலிவுட் மாஃபியா என்று ஆரம்பித்து வைத்த நடிகை கங்கனா ரனாவத்தான் நெபோடிசத்தையும் தொடங்கி வைத்தார்.

நேரடியாக குற்றம்
இது தொடர்பாக, மகேஷ் பட், கரண் ஜோஹர் உட்பட சில பாலிவுட் பிரபலங்களை குறிவைத்து தாக்கினார். அவர்களை நேரடியாகவே குற்றம் சாட்டினார். இதையடுத்து திறமையில்லாத, பிரபலங்களின் வாரிசு நடிகர், நடிகைகளால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை தொடர்ந்தது.

சோனாக்ஷி சின்ஹா
பிரபல வாரிசு நடிகைகளின் சோசியல் மீடியா பக்கங்களுக்கே சென்று அவர்களை நெட்டிசன்ஸ் சரமாரியாக விளாசினர். இதனால், நடிகை சோனாக்ஷி சின்ஹா, ஆலியா பட் உட்பட சில நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர்.

எஃகு நரம்புகள்
இது காலங்காலமாக சினிமாவில் நடந்து வருவதுதான் என்றும் இதுபற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றது என்றும் பல சினிமா பிரபலங்கள் கூறினர். நடிகர் சோனு சூட், உங்கள் நரம்புகள் எஃகில் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பாலிவுட்டுக்கு வாருங்கள் என்று 'அவுட்சைடர்'களுக்கு அட்வைஸ் செய்திருந்தார்.

முட்டாள்தன வாதம்
இயக்குனர் பால்கி, இது முட்டாள்தனமான வாதம் என்றார். இவர் அமிதாப்பச்சன் நடித்த சீனி கம், தனுஷ், அமிதாப் நடித்த ஷமிதாப், பேட்மேன் உட்பட சில இந்திப் படங்களை இயக்கியவர். அவர் கூறும்போது, நெபோடிசம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. காய்கறி விற்பவர் கூட தங்களுக்கு அடுத்து தங்கள் தொழிலை தங்கள் வாரிசுகளிடம் கொடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.