Don't Miss!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னைப் பார்க்காமலேயே முக்கியத்துவம் கொடுத்தவர் சமுத்திரகனி - தொண்டன் நாயகி அர்தனா ஃபீலிங்
தொண்டன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை அர்தனா, என்னை ஒருமுறை கூட பார்க்காமல் எனக்கு முக்கியமான ரோலை டைரக்டர் சமுத்திரகனி எப்படி கொடுத்தார் என்பது ஆச்சர்யம் என்று கூறினார்.
சென்னை: தொண்டன் என்னும் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், 'நிறைய படங்களை சமுத்திர கனி இயக்குகிறார். அந்தப் படங்களைத் தரமாகத் தருகிறார்' என பாராட்டினார். 'என்னை பார்க்காமலேயே எனக்கு எப்படி இந்த முக்கிய ரோலைக் கொடுத்தீங்க?' என நாயகி அர்தனா கேட்டபோது மேடையில் இருப்பவர்கள் சிரித்தனர்.
இயக்குநர் சமுத்திரகனி இயக்கி நடிக்கும் தொண்டன் பட ஆடியோ ரிலீஸ் நடைபெற்றது. அதில் இயக்குநர் பாலா, வெற்றிமாறன், விஜய்மில்டன், கஞ்சா கருப்பு, நாயகிகள் சுனைனா, அர்தனா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய நாயகி அர்தனா,''என்ன பார்க்காமலேயே எனக்கு எப்படி, இந்த ரோலைக் கொடுத்தீங்க'' என கேட்டபோது, மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, நாங்கள் விசாரணை படம் முடித்து படத்தை முடித்துவிட்டோம் என்று ஃபீல் பண்ணுவதற்குள் கனி இரண்டு படங்களை முடித்து விட்டார். அவை தரமாகவும் இருக்கிறது என்பதுதான் முக்கியம்'' என கூறினார்.
அடுத்துப் பேசிய எழுத்தாளர், நடிகர் வேல. ராம மூர்த்தி,''மனதில் கறையில்லாமல் இருப்பவர்களால்தான் நல்ல படைப்பை தர இயலும். சமுத்திரகனியிடமிருந்து நல்ல படைப்புகள் வருதற்கு அவர் மனம்தான் காரணம்'' என கூறினார்.