Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
போன மாசம் வரை நண்பர்களுடன் ஜாலி டூர் அடித்த தூரிகை கபிலன்.. திடீரென தற்கொலை செய்து கொண்டது ஏன்?
சென்னை: கவிஞர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெறும் 27 வயதான தூரிகை கபிலன் திடீரென இப்படியொரு சோக முடிவை எடுத்ததன் காரணம் என்ன என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் வரை தனது தோழிகளுடன் சுற்றுலா எல்லாம் சென்று சந்தோஷமாக இருந்து வந்த தூரிகை திடீரென இப்படியொரு முடிவை எடுத்தது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பைலட்டாக மாற வேண்டிய முரளியை கார்த்திக்காக மாற்றிய பாரதிராஜா... நவரச நாயகனை காதலித்த 3 ஹீரோயின்ஸ்
ரொம்ப துணிச்சலான பெண்
தான் ஒரு Rare ஆன பொண்ணு என அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Rareism என்கிற சைன் போர்டுக்கு கீழ் நின்று போஸ் கொடுத்துள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக "When being RARE becomes your NORMAL! Brand ambassador - RAREISM" என பதிவிட்டுள்ளார். ஏகப்பட்ட மீடியா வேலைகளை துணிச்சலாக செய்து வந்த தூரிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன நேர்ந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
வற்புறுத்தல் எல்லாம் ஒரு காரணமா
திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியது தான் தூரிகை கபிலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள காரணம் என போலீஸார் முதற்கட்ட விசாரணையில் தகவல் அளித்துள்ள நிலையில், திருமணம் வேண்டாம் என்று பெற்றோர்களுடன் துணிச்சலாக சொல்லக் கூடிய பெண் எப்படி அதற்காக தற்கொலை செய்து கொண்டார் என சமூக வலைதளங்களில் கேள்விகள் கிளம்பி உள்ளன.
ஜாலியான பொண்ணு
தூரிகை கபிலன் ரொம்ப ரிசர்வ்ட் ஆன பெண் எல்லாம் கிடையாது. படு ஜாலியான பெண் தான். அதிலும், ரொம்பவே துணிச்சலான பெண். ஏகப்பட்ட பணிகளை தனியாளாக செய்து வந்த அவர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவி பிரபலங்களுடன்
விஜய் டிவி பிரபலங்களான ஈரோடு மகேஷ், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் உள்ளிட்ட பலருடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்துள்ளார் தூரிகை கபிலன். அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஏகப்பட்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
நடிகர்களுடன்
Being Woman எனும் இதழின் ஆசிரியராக செயல்பட்டு வந்த தூரிகை கபிலன் ஏகப்பட்ட நடிகர்களை பேட்டி எடுத்துள்ளார். அரவிந்த்சாமி, சிம்ரன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கம் முழுவதும் நிரம்பி வழிகின்றன.
வால்பாறை டூர்
கடந்த ஆகஸ்ட் மாதம் தனது தோழிகளுடன் வால்பாறைக்கு ஜாலி டூர் சென்று வந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தூரிகை கபிலன் பதிவிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது மரணத்துக்கான உண்மையான காரணத்தை போலீஸார் கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.