Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கந்துவட்டிக்கு எதிரான 'பொதுநலன் கருதி' பட இயக்குனருக்கு மிரட்டல்!
கந்துவட்டி கொடுமைக்கு எதிராக படம் எடுத்த இயக்குனர் சீயோனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: கந்துவட்டி கொடுமைக்கு எதிராக 'பொதுநலன் கருதி' என்ற படத்தை எடுத்த இயக்குனர் சீயோனுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஏ.வி.ஆர். ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அன்புவேல்ராஜ் தயாரித்துள்ள படம் 'பொதுநலன் கருதி'. கந்துவட்டி கொடுமைக்கு எதிராக பேசும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கியுள்ளார்.
இதில் சந்தோஷ், ஆதித், சுபிக்ஷா, கருணாகரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை ஜூலை மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் சீயோன், படத்தை வெளியிடக் கூடாது என மர்ம நபர்கள் மிரட்டல் விடுப்பதாகக் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இதேபோல ஏற்கனவே இரண்டு சம்பவங்களை நான் நேரில் பார்த்து பாதிப்படைந்தேன்.
அதன் பிறகு தான் இதை பற்றி படம் எடுக்க வேண்டும் என தீர்மானித்து, சுமார் ஆறு மாதங்கள் ஆய்வு செய்தேன். அப்போது தான் கந்துவட்டி மாஃபியா பற்றி தெரியவந்தது. இதையடுத்து, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஒத்துழைப்புடன், இந்த படத்தை எடுத்துள்ளேன்.
கந்துவட்டிக்கு எதிரான ஒரு பதிவாக இந்த படம் இருக்கும். இதனால் இப்போதே எனக்கு மிரட்டல் வர தொடங்கிவிட்டது. என்ன மிரட்டல் விடுத்தாலும் நான் இதுபோன்ற படங்களை தான் எடுப்பேன். அதற்காக என்னை சமூகவிரோதி என சொன்னாலும் பரவாயில்லை.
தமிழ் சினிமா இன்று கார்ப்பரேட்களின் கையில் சென்றுவிட்டது. தமிழர்களுக்காக படம் எடுக்க யாருமில்லை. பொதுநலன் கருதி கார்ப்பரேட்டுக்கு எதிரான படம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.