Don't Miss!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- News கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கந்துவட்டிக்கு எதிரான 'பொதுநலன் கருதி' பட இயக்குனருக்கு மிரட்டல்!
கந்துவட்டி கொடுமைக்கு எதிராக படம் எடுத்த இயக்குனர் சீயோனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: கந்துவட்டி கொடுமைக்கு எதிராக 'பொதுநலன் கருதி' என்ற படத்தை எடுத்த இயக்குனர் சீயோனுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஏ.வி.ஆர். ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அன்புவேல்ராஜ் தயாரித்துள்ள படம் 'பொதுநலன் கருதி'. கந்துவட்டி கொடுமைக்கு எதிராக பேசும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கியுள்ளார்.
இதில் சந்தோஷ், ஆதித், சுபிக்ஷா, கருணாகரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை ஜூலை மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் சீயோன், படத்தை வெளியிடக் கூடாது என மர்ம நபர்கள் மிரட்டல் விடுப்பதாகக் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இதேபோல ஏற்கனவே இரண்டு சம்பவங்களை நான் நேரில் பார்த்து பாதிப்படைந்தேன்.
அதன் பிறகு தான் இதை பற்றி படம் எடுக்க வேண்டும் என தீர்மானித்து, சுமார் ஆறு மாதங்கள் ஆய்வு செய்தேன். அப்போது தான் கந்துவட்டி மாஃபியா பற்றி தெரியவந்தது. இதையடுத்து, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஒத்துழைப்புடன், இந்த படத்தை எடுத்துள்ளேன்.
கந்துவட்டிக்கு எதிரான ஒரு பதிவாக இந்த படம் இருக்கும். இதனால் இப்போதே எனக்கு மிரட்டல் வர தொடங்கிவிட்டது. என்ன மிரட்டல் விடுத்தாலும் நான் இதுபோன்ற படங்களை தான் எடுப்பேன். அதற்காக என்னை சமூகவிரோதி என சொன்னாலும் பரவாயில்லை.
தமிழ் சினிமா இன்று கார்ப்பரேட்களின் கையில் சென்றுவிட்டது. தமிழர்களுக்காக படம் எடுக்க யாருமில்லை. பொதுநலன் கருதி கார்ப்பரேட்டுக்கு எதிரான படம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!