Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போலீசாக மிரட்டும் ரஜினி.. ஈடுகொடுக்க 3 வில்லன்கள்.. தர்பார் குறித்து புதிய தகவல்கள்!
சென்னை: தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக மூன்று பாலிவுட் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகும் கூட படங்களில் கமிட்டாகி பிஸியாக உள்ளார்.
தற்போது ஏஆர் முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இனி யாராவது கார்த்தி ஹீரோயினை பார்த்து சம்பளம் பத்தி கேட்பாங்க!!
போலீசாக ரஜினி
இந்நிலையில் தர்பார் படம் குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடிக்கிறார்.
நயன்தாரா ஹீரோயின்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.
மூன்று வில்லன்கள்
இந்நிலையில் படத்தில் ரஜினிக்கு வில்லன்களாக மூன்று பேர் நடிக்கின்றனர். மூன்று பேருமே பாலிவுட் நடிகர்கள்தான். ஏற்கனவே படத்தில் சுனில் ஷெட்டி, பிரதீக் பாபர் ஆகியோர் வில்லன் பாத்திரத்தை ஏற்றுள்ளனர்.
ஈடுகொடுக்க
அவர்களுடன் மூன்றாவதாக நவாப் ஷா சேர்ந்துள்ளார். வெயிட்டான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் படத்தின் மூன்று வில்லன்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொங்கல் விருந்து
தர்பார் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.