Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜீவா படத்தில் வில்லத்தனம் செய்யும் துளசி?
சென்னை: ஜீவாவுடன் யான் படத்தில் நடிக்கும் துளசி அதில் வில்லத்தனம் செய்யும் ஹீரோயினாக வருகிறாராம்.
ராதாவின் இளைய மகள் துளசி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அவரது அக்கா கார்த்திகாவை போன்று தெலுங்கு படத்தில் அறிமுகமாகிவிட்டு தமிழுக்கு வராமல் நேராக கோடம்பாகத்திற்கே வந்துவிட்டார்.
முதல் படமே மணிரத்னம் படம் நல்ல ஆரம்பம் என்ற அவரது நினைப்பில் இடி விழுந்தது போன்று கடல் படம் ஊத்திக் கொண்டது. இதனால் துளசி கவலையில் இருந்தார். இருப்பினும் கவலையை ஓரங்கட்டிவிட்டு ஜீவாவுடன் சேர்ந்து யான் படத்தில் நடித்து வருகிறார்.
கடலில் அப்பாவி
கடல் படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார் துளசி.
2வது படத்தில் வில்லி
2வது படமான யானில் துளசி மரத்தைச் சுற்றி பாட்டுப்பாடும் ஹீரோயின் இல்லையாம். மாறாக வில்லத்தனம் கலந்த ஹீரோயினாக நடிக்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
யான் கைகொடுக்குமா?
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் யான் படம் தனக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்று துளசி நம்பிக்கையோடு இருக்கிறார்.