Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அக்கா கார்த்திகாவுடன் ஜோடி சேர்ந்த ஜீவா அடுத்து தங்கச்சி துளசியுடன் இணைகிறார்?
மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் கார்த்திக் மகன் கவுதமும், ராதாவின் இரண்டாவது மகள் துளசியும் நடித்து வருகின்றனர். திரை உலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஜோடியின் புகைப்படங்களை வெளியிடுவதற்குக் கூட மணிரத்னம் தடை விதித்துள்ளார். இந்த நிலையில் துளசி அடுத்ததாக ஜீவா உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'யான்' திரைப்படத்தை ஆஸ்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்களை தயாரித்த இந்நிறுவனம் ஜீவாவின் அடுத்த படத்தை தயாரிக்கின்றனர். 'யான்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. கடல் படத்தில் துளசி பிஸியாக இருப்பதால் அது முடிந்த உடன் யான் படத்தில் துளசி நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவோ கோ படத்தில் கார்த்திகாவுடன் இணைந்து நடித்தார் ஜீவா. ராதாவின் மூத்த மகள்தான் கார்த்திகா. இந்த நிலையில் அடுத்து கார்த்திகாவின் தங்கச்சியுடன் இணையப் போகிறார் ஜீவா. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்கா, தங்கச்சி நடிகைகளுடன் இணையும் நடிகர் என்ற பெயர் ஜீவாவுக்கு கிடைக்கவுள்ளது.
ஒரு காலத்தில் ராதாவும், அவரது அக்கா அம்பிகாவும் இணைந்து தமிழ் ஹீரோக்களை கலக்கி வந்தனர். ரஜினி, கமல் உள்ளிட்டோர் இவர்கள் இருவருடனும் மாறி மாறி நடித்துள்ளனர். மேலும் ஒரே படத்தில் இந்த இரு ஹீரோயின்களுடனும் இணைந்தும் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
பூங்காற்று திரும்புதோ....??