Don't Miss!
- News இப்பவும் நாமதான் ‘டாப்’ல இருக்கணும்.. தோழமை கட்சிக்காக டார்கெட் வைத்து களத்தில் இறங்கிய ஐ.பெரியசாமி!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க!
சென்னை: டிக்டாக் இலக்கியாவை தொடர்ந்து மேலும் ஒரு டிக்டாக் பிரபலம் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் பெரும் பிரபலமான செயலிகளில் ஒன்று டிக் டாக். இதனை சாமானிய மக்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்கள் பலரும் பயன்படுத்தி வந்தனர்.
சீன செயலியான இந்த டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்து. இதனால் பிரபலங்கள் பலரும் ரொம்பவே வருத்தப்பட்டு தங்களின் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தனர்.
நாளை புதுபடம் படப்பிடிப்பு..
இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவில், நாளை புதுபடம் படப்பிடிப்பு.. என பதிவிட்டுள்ளார். மேலும் வொய்ட் அன்ட் வொய்ட் வேட்டி சட்டையில் கழுத்தில் சிவப்பு துண்டுடனும் போஸ் கொடுத்து போட்டோ ஷேர் செய்துள்ளார் ஜிபி முத்து.
கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
அவருடைய இந்த பதிவையும் அவருடைய போட்டோவையும் பார்த்த நெட்டிசன்கள் ஜிபி முத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பலரும் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
மரக்கடை..
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார்.
தற்கொலை முயற்சி
கொரோனா லாக்டவுன் காரணமாக தொழில் முடக்கம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார் ஜிபி முத்து. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.