இப்படி குனிந்து தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லனுமா? டிக் டாக் இலக்கியாவால் கடுப்பான பேன்ஸ்!
சென்னை: டிக்டாக் செயலி மூலம் இரட்டை அர்த்த வசனங்களுடன் விவகாரமாக ஆட்டம் போட்டு இளசுகள் மத்தியில் பிரபலமானவர் தான் டிக் டாக் இலக்கியா. எப்போதும் அரைகுறை ஆடையுடன் வலம் வரும் இலக்கியா, நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறேன் என்று கவர்ச்சி போசுடன் வாழ்த்து சொல்லி உள்ளார். அதைப்பார்த்து இணையவாசிகள் அவரை திட்டி வருகின்றனர்.
சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இலக்கியா, சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற கனவுடன் ஊரைவிட்டு ஓடினார். ஆனால், இலக்கியாவிற்கு பஞ்சு மில்லில் தான் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலையில் பல மணிநேரம் வேலை செய்தாலும், சொற்பமான சம்பளம் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால், இந்த வேலையும் சம்பளமும் நமக்கு கட்டுபடி ஆகாது என்பதால், தனது வசீகரமான அழகை வைத்து, சினிமாவில் நடிகையாகி விடலாம் என வாய்ப்பு தேடி அலைந்தார். சினிமா வாய்ப்பு தேடி அலைந்த இலக்கியாவிற்குசிலர் படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவரை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளனர்.

டிக் டாக் இலக்கியா: இதைத்தொடர்ந்து இலக்கியா நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் நீச்சல் காட்சியில் வரம்பு மீறி கவர்ச்சி காட்டி இருந்தார்.ஆனால், இந்த படம் வெளியானதா இல்லை என்று கூட தெரியவில்லை. படவாய்ப்பு தேடி போனால், படுக்கைக்கு அழைப்பதால், சினிமா வேண்டாம் என்று முழுக்கு போட்டுவிட்டு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி ஆட்டம் போட்டு வருகிறார். இதுமட்டுமில்லாமல், அவ்வப்போது வெளிநாட்டுக்கு டூர் அடிக்கும் இலக்கியா, அங்கு பல விவகாரமான வேலைகளையும் செய்து சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சில ஆடியோக்களும் இணையத்தில் வெளியானது.

நீ பத்தினியா: அண்மையில், இலக்கியா குக்கிங் சேனல் ஒன்றை தொடங்கி அதில் விதவிதமான வீடியோக்களை போட்டு வருகிறார். இதுகுறித்து ஷகிலாவுக்கு அளித்த பேட்டியில் சிறு வயதில் இருந்தே எனக்கு சமைப்பது என்பது பிடிக்கும், நல்ல சுவையாக சமைப்பேன் என்பதால் இந்த குக்கிங் சேனலை ஆரம்பித்தேன். அதற்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ஆனால், சிலர் நீ இனி கவர்ச்சி வீடியோ போடமாட்டியா, பத்தினியா மாறிட்டியானு கேட்கிறார்கள் என்று கவலையுடன் பேசி இருந்தார்.
புடவையில் இலக்கியா: இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் டிக் டாக் இலக்கியா, எந்த பண்டிகையாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அண்மையில் இவர், , வரலட்சுமி விரதம் இருந்து, வீட்டில் பூஜை செய்து, தழையத் தழைய புடவை அணிந்து கொண்டு, தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு அழகாக போஸ் கொடுத்து இருந்தார். அதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

கடுப்பான பேன்ஸ்: ஆனால், இப்போது, கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்கிறேன் என்ற முன்னழகை அப்பட்டமாக காட்டி, குனிந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி குனிந்து தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லனுமா? நீங்க எப்போதும் திருந்தவே மாட்டிங்களா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், ஒரு சில ரசிகர்கள் இலக்கியாவை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











