Tiktok Elakkiya: கடற்கரையில் ரோஜா பூவுடன் காத்திருக்கும் டிக் டாக் இலக்கியா.. யார் அந்த காதலர்!
சென்னை: உன்னைச் சுற்றி.. ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்...ராத்திரியின் நீளம் விளங்கும்.. என காதல் பற்றி கவிப் பேரரசு வைரமுத்து தனது கவிதையில் அழகாக சொல்லி இருப்பார். காதல் என்பது யாருக்குத்தான் பிடிக்காது, இந்த உலகத்தில் காதல் வயப்படாதவர்கள் யாராவது இருக்கமுடியுமாக என்ன. அப்படிப்பட்ட இந்த நாளைத்தான் காதலர் தினமாக ஆண்டு தோறும் காதலர் தினமாக அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அந்த நாளில் மனதிற்கு பிடித்தவர்களுக்கு பரிசு பொருள் வாங்கி கொடுப்பது, ரோஸ் கொடுப்பது வழக்கம் அந்த வகையில் டிக் டாக் இலக்கியா கையில் ரோசுடன் இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

டிக் டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலக்கியா, சில ஆண்டுகள் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், படவாய்ப்பு அவருக்கு அமையவில்லை, மேலும் சிலர் படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இலக்கியாவை ஏமாற்றியதால், சினிமா வேண்டாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கம் வந்தார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது, டிக் டாக் இலக்கியா காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராமில் கையில் மலர் கொத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், இலக்கியா யாருக்காக காத்திருக்கிறார். அந்த காதலர் யார் என்று கேட்டு வருகின்றனர்.

டிக் டாக் இலக்கிய: தற்போது, இலக்கியா கவர்ச்சியை ஓரம் கட்டிவிட்டு புதிதாக குக்கில் சேனல் ஒன்றை தொடங்கி உள்ளார். அதுகுறித்து, சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலில்,.நடிகை ஷகிலாவுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், நான் எப்போதும் தனியாகத்தான் இருப்பேன். தனியாக இருக்கும்போது நிறைய விஷயத்தை நினைத்து அழுது இருக்கிறேன். ஆனால், இந்த தனியான வாழ்க்கை எனக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்துவிட்டது என்றார். மேலும், தனது குக்கில் சேனலுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். 8 வயதில் இருந்தே சமையல் செய்து வருகிறேன். அதனால், எனக்கு சமையல் செய்வது பிடித்தமான ஒன்று, இதனால், இனி மேல் சமையல் வீடியோ போடலாம் என்று நினைத்தேன்.அதற்கும் சிலர் இனிமே காட்ட மாட்டியா? நீ என்ன பத்தினியா என்றும் என்னை கமெண்ட் போடுகிறார்கள் என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார்.



Click it and Unblock the Notifications











